மியான்மாரை ஆதரிக்கிறது சீனா

றோகிஞ்சா முஸ்லிம் ஆயுததாரிகள் மீது மேற்கொண்டு வருவதாக, மியான்மார் அரசாங்கம் தெரிவிக்கும் இராணுவ நடவடிக்கைக்கான தனது ஆதரவை, சீனா வெளியிட்டுள்ளது. ஓகஸ்ட் 25ஆம் திகதி, பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாகவே, 400,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ராக்கைனிலிருந்து பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அத்தோடு, பல நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

(“மியான்மாரை ஆதரிக்கிறது சீனா” தொடர்ந்து வாசிக்க…)

“கிழக்கு மாகாண நீடிப்பு காலத்தில் தமிழர் முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்”

“கிழக்கு மாகாணத்தின் ஆட்சி காலம் நீடிக்கப்பட்டால், நீடிக்கப்படும் காலத்துக்கு முதலமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்” என்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

(““கிழக்கு மாகாண நீடிப்பு காலத்தில் தமிழர் முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்”” தொடர்ந்து வாசிக்க…)

பஷீரின் மகத்தான சேவை என்றென்றும் முஸ்லிம் காங்கிரஸுக்கு தேவை!

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு இக்கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தின் மகத்தான சேவை என்றென்றைக்குமே தேவையாக உள்ளது என்று ஏறாவூர் நகர பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், கட்சியின் ஏறாவூர் பிரதேச முக்கியஸ்தர்களில் ஒருவருமான எம். சி. ஏ. கபூர் தெரிவித்தார்.

(“பஷீரின் மகத்தான சேவை என்றென்றும் முஸ்லிம் காங்கிரஸுக்கு தேவை!” தொடர்ந்து வாசிக்க…)

‘சிரியாவில் போர் வெல்லப்பட்டு விட்டது’

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரில் வெற்றிபெற்று விட்டதாக, லெபனானைச் சேர்ந்த ஷியா முஸ்லிம் குழுவான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட்டுவந்த ஆயுததாரிகளை, ஏறத்தாழ நாட்டை விட்டு, அரசாங்கப் படைகள் வெளியேற்றிவிட்டன என, ரஷ்யா தெரிவித்தது. சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின், இரண்டு முக்கியமான தோழமைப் பிரிவுகளால் வழங்கப்பட்ட இக்கருத்துகள், சிரியாவில், அரசாங்கப் படைகளால் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டுவரும் முன்னேற்றத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

(“‘சிரியாவில் போர் வெல்லப்பட்டு விட்டது’” தொடர்ந்து வாசிக்க…)

‘யாழ்ப்பாணம், கிளி.யில் தற்கொலைகள் அதிகரிப்பு’

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை, வருடத்துக்கு வருடம் அதிகரித்துள்ளதாக, வட மாகாண ​சபையின் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட அந்த கணிப்பீட்டின் பிரகாரம், இரண்டு மாவட்டங்களிலும் 2009ஆம் ஆண்டில் தற்கொலை செய்து​கொண்டோரின் எண்ணிக்கை 124 ஆகும். 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 141 பேரும், 2012ஆம் ஆண்டு 153 ​பேரும் 2013ஆம் ஆண்டு 158 பேரும், 2014ஆம் ஆண்டு 157 பேரும், 2015ஆம் ஆண்டு 139 பேரும் 2016ஆம் ஆண்டு 179 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

(“‘யாழ்ப்பாணம், கிளி.யில் தற்கொலைகள் அதிகரிப்பு’” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயார்: ராகுல் காந்தி விருப்பம்

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடத் தயார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இரண்டு வார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்ளி பல்கலைக்கழகத்தில் பேசினார். அப்போது அவரிடம் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயார். ஆனால் இதுகுறித்து நான் முடிவு செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

(“பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயார்: ராகுல் காந்தி விருப்பம்” தொடர்ந்து வாசிக்க…)

மியான்மார் விவகாரம்: ’மலேஷியா தலையிட வேண்டும்’

மியான்மாரில் றோகிஞ்யா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க, பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்றடிப்படையில், மலேஷியா தலையீடு செய்ய வேண்டும் என, மலேசியாவின் பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ்விடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(“மியான்மார் விவகாரம்: ’மலேஷியா தலையிட வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

நம்பிக்கையில்லா பிரேரணை சி.விக்கு எதிராக வருகிறது?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பதற்கு, உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. மாகாண சபையில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை ஒத்திவைப்பதனால், மாகாண சபையில் பிரச்சினையான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றை அடிப்படையாக வைத்தே, சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. முதலமைச்சரின் செயற்பாட்டினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், அதிருப்தியில் இருப்பதாகவும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கமுடியாமல் அவர்கள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது என்றும் அந்த தகவல் தெரிவித்தது.

கிழக்கின் மூத்த தொழிற்சங்கவாதி இப்றாலெப்பை மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்து வடக்கில் தீர்மானம்!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் பொருளாளரான நற்பிட்டிமுனையை சேர்ந்த மூத்த தொழிற்சங்கவாதி ஐ. எம். இப்றாலெப்பை ஹாஜியார் – வயது 67 மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும், கல்முனை பொலிஸார் நீதியான விசாரணையை நடத்த வேண்டும் என்று கோருவதாகவும் இச்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

(“கிழக்கின் மூத்த தொழிற்சங்கவாதி இப்றாலெப்பை மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்து வடக்கில் தீர்மானம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதி தலைமையில் அரச சாகித்திய விருது விழா

இலங்கையின் இலக்கியத் துறையை வளப்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களுக்கு, அரச சாகித்திய விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (08) பிற்பகல், தாமரைத்தடாக மண்டபத்தில் இடம்பெற்றது. சிங்களம், தமிழ், ஆங்கில இலக்கியத்தின் மேம்பாட்டுக்காகச் செய்த சேவையை கௌரவித்து வழங்கப்படும் சாகித்திய ரத்ன விருது, பேராசிரியர் ஆரிய ராஜகருணா, நீர்வை பொன்னையன், ஜீன் அரசநாயகம் ஆகிய எழுத்தாளர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

(“ஜனாதிபதி தலைமையில் அரச சாகித்திய விருது விழா” தொடர்ந்து வாசிக்க…)