சிரிய யுத்தநிறுத்தத்தை வரவேற்கிறது ஐ.நா பாதுகாப்புச் சபை

சிரிய சிவில் யுத்தத்திலுள்ள யுத்தநிறுத்தமொன்றை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை நேற்று (31) வரவேற்றுள்ளது. எனினும், யுத்தநிறுத்த மீறல்கள் தொடருமானால், யுத்தநிறுத்தத்தை கைவிடவுள்ளதாக போராளிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாகத் தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், கடந்தாண்டில் கொண்டுவரப்பட்ட மூன்றாவது யுத்தநிறுத்தத்தை வரவேற்கும் தீர்மானத்தை, 15 அங்கத்தவர்களைக் கொண்ட பாதுகாப்புச் சபை, ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் இடம்பெற்ற கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

(“சிரிய யுத்தநிறுத்தத்தை வரவேற்கிறது ஐ.நா பாதுகாப்புச் சபை” தொடர்ந்து வாசிக்க…)

திருகோணமலை காரியாலயத்தில் கல்வி சேவை நிகழ்வு .

தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலை காரியாலயத்தில் மாவட்ட செயலாளர் சத்தியனால் கல்வி சேவை நிகழ்வு நடத்தப்பட்டது. 550 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் கட்சியின் தலைவர் தி .ஸ்ரீதரன், நிதி பொறுப்பாளர் கிருபா மற்றும் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டனர்.

பழிக்குப் பழி: 35 அமெரிக்க தூதர்களை வெளியேற்ற ரஷ்யா திட்டம்

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு தூதர்கள் 35 பேரை வெளியேற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த தேர்தல் முறையில் ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் குற்றம் சாட்டி இருந்தார்.

(“பழிக்குப் பழி: 35 அமெரிக்க தூதர்களை வெளியேற்ற ரஷ்யா திட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் தங்க மகேந்திரன் எம்மைவிட்டுப் பிரிந்தார்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இன் நீண்டகால உறுப்பினருமான தோழர் தங்க மகேந்திரன் இன்று சென்னையில் இயற்கை எய்தினார். ஆரம்ப காலத்தில் தமிழ் இளைஞர் பேரவையில் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்ட இவர் தோழர் புஷ்பராஜ, பிரான்சிஸ், புஸ்பராணி, பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ஆகியோருடன் இணைந்து ஆரம்ப கால தமிழீழ விடுதலை இயக்கத்தில்(TLO)(இவ் அமைப்பு தற்போதைய் ரெலோ அமைப்பு அல்ல) செயற்பட்டுவந்தார். இதில் முத்துக்குமார் போன்றவர்களும் இணைந்து செயற்பட்டுவந்தனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழுவினரான முத்துக்குமாரசாமி .புஷ்பராஜா ,வரதராஜப் பெருமாள், சந்திரமோகன் ஆகியோருடன் தங்கமகேந்திரனும் தலைமைக்குழுவில் இருந்தார் இவ் அமைப்பின் செயற்பாடு மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும் செயற்பாட்டில் இருந்தது. இதன் பின்பு ஈழப்புரட்சி அமைப்பிலிருந்து கொள்கை வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வந்து உருவான பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இல் இணைந்து தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.

(“தோழர் தங்க மகேந்திரன் எம்மைவிட்டுப் பிரிந்தார்” தொடர்ந்து வாசிக்க…)

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த பொறுப்பேற்க, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் விடுத்த அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் ஆவதற்கு சசிகலா ஒப்புக் கொண்டார். அதிமுக பொதுக்குழுவிலும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

(“அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்” தொடர்ந்து வாசிக்க…)

சிரிய அரசாங்கமும் எதிரணியும் பேச்சுவார்த்தையில்

இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பதாக, எதிரணியுடன் சிரிய அரசாங்கம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்ய வெளிநாட்டமைச்சர், நேற்று (27) தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பேச்சுவார்த்தைகள் பற்றி தமக்கேதும் தெரியாது எனத் தெரிவித்துள்ள சவூதியினால் ஆதரவளிக்கப்படும் எதிரணிக் குழு, ஆனால், யுத்தநிறுத்தத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

(“சிரிய அரசாங்கமும் எதிரணியும் பேச்சுவார்த்தையில்” தொடர்ந்து வாசிக்க…)

காஸ்ட்ரோவின் சிலைகளுக்கு கியூபாவில் தடை

கியூபாவின் புரட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு சிலைகளை எழுப்பவும் அவரின் பெயரில் பொது இடங்களைப் பெயரிடவும் தடை விதிக்கும் சட்டமொன்று, அந்நாட்டு கீழவையால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் உயிரிழந்த காஸ்ட்ரோவின் விருப்பத்துக்கு அமைவாகவே, இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

(“காஸ்ட்ரோவின் சிலைகளுக்கு கியூபாவில் தடை” தொடர்ந்து வாசிக்க…)

சப்ரகமுவ ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடு

(மக்கள் ஆசிரியர் சங்கம்)

2017ஆம் ஆண்டுக்கான சபரகமுவ மாகாண ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன. நியாயமான காரணங்களை முன்வைத்து இடமாற்றத்தை கோரியவர்களின் இடமாற்றங்கள் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். சபரகமுவ மாகாண ஆசிரியர் இடமாற்றல் சபைகளில் இடம்பெற்று வரும் அரசியல் தலையீடு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

(“சப்ரகமுவ ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடு” தொடர்ந்து வாசிக்க…)

ருமேனியாவில் ஒரு முஸ்லிம் பெண்ம‌ணி பிர‌த‌ம‌ர்…?

ருமேனியாவில் ஒரு முஸ்லிம் பெண்ம‌ணி பிர‌த‌ம‌ராக‌ தெரிவாகி உள்ளார். ஆனால், அவ‌ரை ப‌த‌வியில் அம‌ர்த்துவ‌த‌ற்கு ஜ‌னாதிப‌தி ம‌றுத்து வ‌ருகிறார். அத‌ற்கான‌ கார‌ண‌ம் எதையும் கூற‌வில்லை. ஐரோப்பிய‌ ஒன்றிய‌ நாடொன்றின் முத‌லாவ‌து முஸ்லிம் பிர‌த‌ம‌ராக‌ வ‌ரும் வாய்ப்புப் பெற்றுள்ள‌ Sevil Shhaideh, 52 வ‌ய‌தான‌ பொருளிய‌ல் நிபுண‌ர். இத‌ற்கு முன்ன‌ர் பிர‌தேச‌ அபிவிருத்தி அமைச்ச‌ர் ப‌த‌வி வ‌கித்துள்ளார். முன்னாள் சோஷ‌லிச‌ ருமேனியாவில் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியாக‌ இருந்த‌து, ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க‌க் க‌ட்சி (PDS) என்ற‌ பெய‌ரில் இய‌ங்குகிற‌து. அந்த‌க் க‌ட்சியின் சார்பாக‌ தான் மேற்ப‌டி முஸ்லிம் பெண்ம‌ணி பிர‌த‌ம‌ராக‌ தெரிவானார். திரும‌தி Sevil Shhadeh இன் க‌ண‌வ‌ர் Akram Shhadeh, சிரியாவில் ஆசாத் அர‌சில் முக்கிய‌ பொறுப்பு வாய்ந்த‌ அதிகாரியாக‌ இருந்த‌வ‌ர். த‌ற்போதும் ஆசாத் அர‌சின் ஆத‌ர‌வாள‌ர். பிர‌த‌ம‌ர் ப‌த‌வி ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌த‌ற்கு அதுவும் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.

(Kalai Marx)

ரவிராஜ் எம்.பி படுகொலை வழக்கு: அவலக்குரலை மறைத்த ஆனந்தக் கண்ணீர்

(அழகன் கனகராஜ், பேரின்பராஜா திபான்)

தமிழர்கள் மட்டுமன்றி, பெரும்பான்மை இனத்தவர்களும், ஏன் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் சர்வதேசமுமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரான நடராஜா ரவிராஜ், படுகொலை வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை(24) அதிகாலை 12:20க்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும்.

(“ரவிராஜ் எம்.பி படுகொலை வழக்கு: அவலக்குரலை மறைத்த ஆனந்தக் கண்ணீர்” தொடர்ந்து வாசிக்க…)