இலங்கை அரசியலில் ஓர் அம்சம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அரசியல் வாதிகளின் பாதுகாப்பு, குற்றச் செயல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு மற்றும் குற்றச் செயல்களை கையாள்வதில் பொலிஸாரினதும் ஊடகங்களினதும் ஒழுக்க நெறிகள் போன்ற பல பிரச்சினைகள் பேசு பொருளாகி உள்ளது.