புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நற்சான்றுப் பத்திரம் கையளிப்பு

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

கிரிந்த-வில் சிக்கிய ஐஸ் போதைப்பொருளின் திடுக்கிட வைக்கும் பின்னணி

தங்காலை, கிரிந்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இவை இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் தரப்பினரும் நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பருமனை கட்டுக்குள் பெண்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியம்

பருமனாக இருப்பவர்கள் மெலியவும், மெலிந்தவர்கள் ஓரளவுக்குப் பருமனாக மாறவும் முயற்சி செய்கின்றனர். இதனால், மெலிந்த உடல் அமைப்பைக் கொண்ட ஒரு சிலர், பருமனாகி விடுகின்றனர். பல சுற்றுப் பருமனாக இருப்பவர்கள் அந்த முயற்சியை கை விட்டுவிடுகின்றனர். இதனால், இன்னுமின்னும் பருமனாகிவருகின்றனர்.

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸார் யாழ்ப்பாணம் கொக்குவில் கலட்டிப் பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 50 போதை மாத்திரைகளுடன்  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை சம்பவம் மேலும் இருவர் கைது

கொட்டாஞ்சேனையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண் ஒருவரும் அடங்குவார்.

சரணடைய வந்தார் துசித ஹல்லொலுவ

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் துசித ஹல்லொலுவ சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார். 

வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் வெற்றி

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.  இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.  

ஐ.தே.க முடிவு வெளியானது

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழு அனுமதி தெரிவித்துள்ளது.

ரணிலை சந்தித்த பின் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

நுகேகொடையில் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் எதிர்ப்பு பேரணியானது, அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நுகேகொடை கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு கை கொடுக்குமா

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

சில எதிர்க்கட்சிகள் இம் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவிருக்கும் அரச எதிர்ப்பு கூட்டத்தின் நோக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது.