2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியபோது, மூன்று நீண்டகால விலைமனு கோரல்களை ரத்து செய்து அதிக விலைக்கு ஸ்பாட் டெண்டர்களை செயல்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தம்மிக்க ரணதுங்க கைது செய்யப்பட்டார்.
அந்தச் செயல்முறையின் மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 800 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மேலும் கூறுகிறது.