தமிழக சட்டமன்றத் தேர்தல்: வெளிச்சத்துக்கு வராத வியூகங்கள்

தமிழகத்தின், 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், ஏப்ரல் 22ஆம் திகதி தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், இந்தத் திகதியிலிருந்து தொடங்கிவிட வேண்டும். அதுதான் கடந்த காலத் தேர்தல் களத்தின் சிறப்பம்சம். அரசியல் கட்சிகள், பெரும்பாலும் ‘தனிப்பட்ட தாக்குதலை’ தவிர்த்தே வருகின்றன. குறிப்பாக, தே.மு.தி.க-மக்கள்நலக்கூட்டணித் தலைவர்களாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களாக இருந்தாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, அனைவருமே ‘தனிப்பட்ட தாக்குதலை’த் தொடுக்கவில்லை.

(“தமிழக சட்டமன்றத் தேர்தல்: வெளிச்சத்துக்கு வராத வியூகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

600 பொலிஸாரின் கொலையுடன் தொடர்புபட்டவர் ராம்

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி, சமூகமயப்படுத்தப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் ராம் என்பவர், பயங்கரவாத விசாரணைப்பிரிவின் (ரி.ஐ.டீ) காவலில் உள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

(“600 பொலிஸாரின் கொலையுடன் தொடர்புபட்டவர் ராம்” தொடர்ந்து வாசிக்க…)

சூரிச் மாநகரில் “புளொட்” அமைப்பினர் கலந்து கொள்ளும் மாபெரும் மேதின ஊர்வலம்..!!

மே 1 தொழிலாளர் தினம் – 2016
சூரிச் மாநகரில் மாபெரும் மேதின ஊர்வலம்,
01.05.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு…

தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! கழகத் தோழர்களே! தோழமைக் கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2016 மே முதலாம் திகதி சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும் தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்து கொண்டு, இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்க சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பைச் செய்யக்கோரி குரல் கொடுத்து எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக!

(“சூரிச் மாநகரில் “புளொட்” அமைப்பினர் கலந்து கொள்ளும் மாபெரும் மேதின ஊர்வலம்..!!” தொடர்ந்து வாசிக்க…)

எம்மவரின் விசுவாசம்

இன்று யாழ்ப்பாணம் கச்சேரி கேட்போர் கூடத்தில் போலீஸ் பொதுமக்கள் சந்திப்பு நடந்தது……அதின் போது கூட்டமைப்பின் மாகாணசபை அங்கத்தவர ஒருவர் கூறினாராம்…..புலிகளின் காலத்தில் குற்றங்கள் மிகவும் குறைவாக நடந்தது என்று மறைமுகமாக….அதற்கு ஒரு ASP பதிலளிக்கையில் …பயங்கரவாதிகள் போன்று விரும்பிய எல்லோரையும் கொலைசெய்தும்,,,,வழக்கு கணக்கு இல்லாமல் தண்டனை கொடுத்தும்….அதை விட யுத்த காலங்களில் நடந்தது போன்று விசாரணை இல்லாத விடயங்களை செய்ய முடியுமானால்???? 2 மணி நேரத்தில் இவைகளை அடக்க தம்மால் முடியும்…..ஆனால் ஒரு அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைய அப்படி தாங்கள் செய்ய முடியாது என்று….. அதை புரிந்துகொண்ட புலிகேசி திரும்ப கேள்வியே கேட்கவில்லையாம்….

பற்குணம் (பதிவு 17 )

பற்குணத்தோடு அவரது நெருங்கிய நண்பர்களான டிவகலாலாவும் நிர்வாகசேவைக்கு தெரிவானார் .இன்னொரு நண்பரான ரீ.ஈ. ஆனந்தராசா பொலிஸ் நிர்வாகசேவைக்கு தெரிவானார்.பற்குணம் நிர்வாக சேவைக்கு தெரிவானதில் அவருடைய பல்கலைக்கழக ஆசிரியர்களும் நண்பர்களும் வரவேற்றனர். பற்குணம் படிக்கும் காலத்திலும் பின் விரிவுரையாளரான பின்னும் பல்கலைக்கழக ஆசிரியர்களுடன் நல்லுறவை கொண்டிருந்தார்.இதில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் இடதுசாரிக்கோட்பாடுகளை ஏற்காதவர்.ஆனால் மிக நல்ல மனிதர்.இவருக்கு இறுதி வருடங்களில் யாராவது ஒரு மாணவன் பரீட்சையில் சித்திபெற தவறினால் மிகவும் கவலைப்படுவாராம்.ஆனால் ஒரு சில பேராசிரியர்கள் இதைப் பற்றிக் கவலைகொள்வது இல்லை.

(“பற்குணம் (பதிவு 17 )” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். இளைஞர்கள் கைது

இரவு வேளையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 16 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யுhழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளையில் நடமாடியதுடன், மது போதையில் தகராற்றிலும் ஈடுபட்டுள்ளனர். குற்றச் செயல்களை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரப்பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 8 பேரையும், மதுபோதையில் நின்ற 6 பேரையும், அடிபட்ட 1 நபரையும், மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் உட்பட 16 பேரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 16 பேரும் யாழ். பொலிஸ் நிpலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வட மாகாணசபையை கலைத்து கையிலெடுக்கவும்: கம்மன்பில

வட மாகாணசபையைக் கலைத்துவிட்டு, அதன் நிர்வாகத்தை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிவிதுரு ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான உதய கம்மன்பில, கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, வட மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்துரைத்தார்.

(“வட மாகாணசபையை கலைத்து கையிலெடுக்கவும்: கம்மன்பில” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதா மீண்டும் முதல்வராவாரா? அல்லது மாற்றம் வருமா?

தமிழ்நாட்டிற்கான தேர்தல் மே16 நடைபெற்று முடிவுகள் மே19 வெளிவரவுள்ளது. இம் முறை யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என எந்தவித எதிர்வும் கூறமுடியாமல் இருக்கிறது தமிழக கள நிலவரங்களை பார்க்கும் போது. யாருக்கும் அறுதிப்பெருபான்மை கிடைத்துவிடும் எனபதும் சந்தேகமே தேர்தல் அறிவிக்கப்பட்டபின்னர். தேர்தல் கூட்டணிகள் கட்சித்தாவல்கள் கூட்டணி சேர்கைகைள், பிரிப்புகள். கழட்டிவிடபட்ட நிலைமைகள் என ஓரே அல்லோலகல்லோலப் பட்டவண்ணம் இருக்கிறது தமிழககட்சிகள்.

(“ஜெயலலிதா மீண்டும் முதல்வராவாரா? அல்லது மாற்றம் வருமா?” தொடர்ந்து வாசிக்க…)

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்ன இருக்கிறது கல்வி முறை..?

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

��பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பாடசாலைக்கு செல்லத் தொடங்குகிறது…

��ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை…

��கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை…

(“உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்ன இருக்கிறது கல்வி முறை..?” தொடர்ந்து வாசிக்க…)

காவத்தையில் கூட்டு மே தினம்

தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000/= ஆக உயர்த்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரித்துடன் வீட்டை வழங்கு, அனைவருக்கும் சமமான கல்வியும் இலவசக் கல்வியையும் உறுதி செய், கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து, ஆசிரிய உதவியாளர்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்கு, வாழ்கை செவை குறை, தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கு என்ற கோரிக்கைகளை முன்னிருத்தி மக்கள் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் பண்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடாத்தும் கூட்டு மே தினக் கூட்டம் 01.05.2016 அன்று மு.ப. 10 மணிக்கு காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தமது உறுப்பினர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏனைய உழைக்கும் மக்களுக்கும் அவ் அமைப்புகள் மே தினக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.