புதிய பொருளாதார வலயம் அறிவிப்பு

ஐரோப்பா, சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து, ஒரே பொருளாதார வலயத்தை அறிவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தப் புதிய பொருளாதார வலயம் தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது.

(“புதிய பொருளாதார வலயம் அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ( பதிவு 16)

பற்குணத்துக்கும் நடராசா குடும்பத்துக்கும் கடித மூலமான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.நடராசாவின் தம்பி தங்கராசா,இராசதுரை ஆகியோரும் பண்பற்ற முறையில் கடிதங்களை எழுத பற்குணம் தன் கௌரவம் கருதி பதிலளிப்பதை நிறுத்திவிட்டார்.இதில் இராசதுரை நாகரீகமற்ற வார்த்தைகளைப் பாவித்தார்.இதன் காரணமாக இந்தக் குடும்பத்துடனான தொடர்புகள் விடுபட்டன. பற்குணம் விரிவுரையாளர்.

(“பற்குணம் ( பதிவு 16)” தொடர்ந்து வாசிக்க…)

பசுமை நிறைந்த சம்பூர் மண் சுடுகாடாக மாறப் போகிறதா?

திருகோணமலை சம்பூரில் 500 மெகாவாட்ஸ் அனல் மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தினை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளதன் மூலம் இராஜதந்திர உறவுகளுக்கும் சுற்றாடல் பாதுகாப்புக்கும் இடையே நாடு ஊசலாட்டம் கண்டுள்ளது. சுற்றாடல் பாதுகாப்பு மீது அதீத அக்கறை கொண்டுள்ள இந்த அரசாங்கம், சம்பூர் அனல் மின் நிலையம் விடயத்தில் நுனிப்புல் மேய்வது போல் சுற்றாடல் தாக்கம் பற்றிய மதிப்பீட்டு அறிக்கை தயாரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(“பசுமை நிறைந்த சம்பூர் மண் சுடுகாடாக மாறப் போகிறதா?” தொடர்ந்து வாசிக்க…)

புதிய வழியில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம், அரசியல் அரங்கில் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உருக்கினால் தயாரிக்கப்பட்ட இந்த வீடுகள், வடக்கிலுள்ள காலநிலைக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்றதல்ல என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபையின் வாதமாக இருக்கிறது.

(“புதிய வழியில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்” தொடர்ந்து வாசிக்க…)

கைக்குண்டுடன் அரசியல்வாதியின் தேசிய அடையாள அட்டை

வவுனியா குட் ஷெட் பகுதியிலிருந்து, கைக்குண்டொன்றும் அதன் அருகிலேயே பிரபல தமிழ் அரசியல்வாதியொருவரின் தேசிய அடையாள அட்டையொன்றும் மீட்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையத்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் கைக்குண்டு தணிக்கைச் செய்யும் விசேட அதிரடிப்படையினர் மூலம் குண்டு செயலிழக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திரைப்பட பின்னணிப் பாடகி திருமதி. எஸ். ஜானகி அவர்களது பிறந்த தினம்

எஸ். ஜானகி ஏப்ரல் 23, 1938 – ஆம் ஆண்டு, ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் திரு. ராமமூர்த்தி – திருமதி. சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத் துவங்கிய இவர், நாதசுர மேதை திரு.பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். அதன் பிறகு 1956-ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி பாட்டுப்போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டு ஜானகி இரண்டாம் பரிசு பெற்றார். இப்பரிசினை அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்களின் கரங்களால் பெற்றார்.

(“திரைப்பட பின்னணிப் பாடகி திருமதி. எஸ். ஜானகி அவர்களது பிறந்த தினம்” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையானின் விளக்கமறியல் மே 04 வரை நீடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் இன்று (20) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறுஉத்தரவிட்டார்.

(“பிள்ளையானின் விளக்கமறியல் மே 04 வரை நீடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

கஞ்சாவுடன் மூவர் கைது

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்; இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, மீராகேணிக் கிராமத்திலுள்ள இரண்டு வீடுகளில் மறைந்திருந்த 32 வயதுடைய ஒருவர் 3,000 மில்லிகிராம் கஞ்சாவுடனும் 40 வயதுடைய ஒருவர் 3,100 மில்லிகிராம் கஞ்சாவுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மிச்நகர் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 2,220 மில்லிகிராம் கஞ்சாவுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பற்குணம் (பதிவு15)

எமது ஊரில் ஒரு நெசவு பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டது.இதன் திறப்பு விழாவுக்கு திரு.வி.என.நவரத்தினம் அழைக்கப்பட்டார்.இந்த நெசவு பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுபவர்கள் அம்பது ரூபா பணம் செலுத்தும்படி சின்னத்துரை,நடராசா ஆகியோர் வலியுறுத்தினர். இந்த திறப்பு விழாவுக்கு பற்குணமும் ஒரு பேச்சாளராக அழைக்கப்பட்டார்.ஆனால் பற்குணம் உரிய நேரத்துக்கு வருவதை தவிர்த்தார்.அதுவும் காரணமாகவே.மேடையில் நடராசாவும்,சின்னதுரை என்பவரும் பணம் வசூல் பற்றிப் பேசினார்கள்.அவரகள் பேசி முடிந்தவுடன் பற்குணம் தாமதமாக வந்துவிட்டேன் மன்னிக்கவும் என்று நடராசாவிடம் கூறினார்.நடராசா பற்குணத்தை பேச அழைத்தார்.

(“பற்குணம் (பதிவு15)” தொடர்ந்து வாசிக்க…)

Tribute to S. T. Sivanayagam: editor, guru and father

S.T. Sivanayagam, a giant and champion of Tamil journalism for more than half a century, passed away after making an immense contribution in the political, social, educational and economic fields. S. T. as he was popularly known was indeed a quiet and humble saint, saint in journalism. He was the guru of scores of journalists, working today in top positions in the press, radio and TV. Many of them were at Kanatte last Monday to say farewell and thank you to their mentor, guide and friend. The story of S.T.Sivanayagam and his contribution to journalism from the hot metal period of the fifties to the high tech internet era are indeed unpara-lelled if not unique. Starting at a time when printing was a primitive or laborious task with smudges all over and little or nor colour, S. T. Siv-anayagam was still able to build a wide circulation for the newspapers he edited, sometimes producing what his colleagues and staff saw as magical or mystical methods. During the past fifty years we have seen three eras in printing- the hand-setting period, the linotype era and the current computer offset printing. S. T. Sivanayagam was one of the few journalists who blazed their way through all three eras, maintaining the highest principles and the highest standards of integrity whatever the printing methods were. In the hand-setting era S. T. Sivanayagam was the editor of the Sud-anthiran, the official organ of the Federal Party. But the master journalist with a broad vision turned it into a powerful voice of the Tamil people, especially those who were voiceless or marginalised.

(“Tribute to S. T. Sivanayagam: editor, guru and father” தொடர்ந்து வாசிக்க…)