பிலவுக்குடியிருப்பு விவகாரத்துக்கு ‘பகிர்வு’ இன்றேல் ‘நட்டஈடு’

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு விமானப் படை அமைந்துள்ள காணியில், பொதுமக்களுக்குச் சொந்தமான பகுதியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த படை முகாமில், 54 குடும்பங்களுக்குச் சொந்தமாகவுள்ள சுமார் 40 ஏக்கர் காணியினை, எதிர்வரும் சில நாட்களில் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சு சமிக்ஞை காட்டியுள்ளது.

(“பிலவுக்குடியிருப்பு விவகாரத்துக்கு ‘பகிர்வு’ இன்றேல் ‘நட்டஈடு’” தொடர்ந்து வாசிக்க…)

சம்பள கூட்டு ஒப்பந்த மீள் பரிசீலனை விடயம் இதயசுத்தியுடன் செய்யப்படல் வேண்டும்.

நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான உபாயமாக இருக்க கூடாது.

2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பெருந்தோட்ட சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் முறையாக அமுல்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பாகவும் சம்பளத்தை மீள் பரிசீலனை செய்வதற்காகவும் பேச்சுவார்த்தைகளை நடாத்த இ.தொ.கா. தொழில் அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் சார்பாக கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கமொன்று என்ற வகையில் இ.தொ.கா. அதனை மீள் பரிசீலனை செய்ய முயற்சி எடுப்பதை நாம் வரவேற்கின்றோம். எனினும் இந்த அறிவிப்பானது இதய சுத்தியுடனும் நேர்மையும் கொண்டதாக இருக்க வேண்டும். மாறாக கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான உபாயமாக இருக்க கூடாது.

(“சம்பள கூட்டு ஒப்பந்த மீள் பரிசீலனை விடயம் இதயசுத்தியுடன் செய்யப்படல் வேண்டும்.” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 107)

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இந்திய இராணுவம் இலங்கை வந்தது.இதன் பின்னர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.இவரகளில் ஒரு தொகுதியினர் திருகோணமலை வந்தடைந்தனர்.இவர்களை இந்திய உளவுப்படையினர் பயன்படுத்தி ஆயுதங்களை கையில் கொடுத்து நகரையும் நகரை அண்மித்து வாழ்ந்த சிங்கள மக்களையும் விரட்டியடிக்க ஆலோசனை வழங்கினார்கள்.

(“பற்குணம் (பகுதி 107)” தொடர்ந்து வாசிக்க…)

ஈ.பி.ஆர்.எல்.எவ் – புளொட் கட்சிகளுடன் த.தே.ம. முன்னணி இணையத் தயார்!

(இதைவிட சைக்கிள் ஓட்ட இவருக்கும், இவர் அப்பாவிற்கும், என் இவரின் தாத்தாவின் இறுதி கால வாழ்விற்கும் வேறு வழி இருக்கவிலலை எல்லாம் தமது சொந்த வாழ்விற்காகதான், இவரை அரவணைத்து இவரின் பரம்பரை செய்து பாவங்களை யாரும் சுமக்காதீர்கள்  – சாகரன்)

செய்தி:

தாயகம், தேசியம், சுயநிர்ண யம், வடக்கு-கிழக்கு இணைப்பு இவற்றை யார் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்பட முன்வருகின்றார்களோ, அவர்களு டன் இணைந்து செயற்பட தயார் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகளும் இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டால் அவர்களுடனும் இணைந்து செயற்பட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(“ஈ.பி.ஆர்.எல்.எவ் – புளொட் கட்சிகளுடன் த.தே.ம. முன்னணி இணையத் தயார்!” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவு

கேப்பா புலவு பிலக் குடியிருப்பு மக்களின் சொந்த நிலமீட்புக்கான அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவாக மல்லாவி வர்த்தகர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை திங்கட்கிழமை நடாத்தி இருந்தது. இது உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு விடயம். இப்படியான ஆதரவை தெரிவிக்க ஏனைய நம்முடைய மக்கள் மறந்து விட்டார்களே என்பது தான் வேதனை. ஜல்லிக்கட்டுக்காக வீதியில் இறங்கிய மக்களுக்கு கேப்பாபுலவு மக்களின் கண்ணீர் தெரிய வில்லையே.
தங்களுடைய காணிகளை தருமாறு கேட்டு மக்கள் வீதிகளிலே கிடக்கிறார்கள்.

(“கேப்பாபுலவு” தொடர்ந்து வாசிக்க…)

கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்

தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புகளும் நம்பியிருக்க, அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கவனம் பெறும் வகையிலான கலகக்குரல்களை எழுப்பியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த வரிசையில், இறுதியாக இணைந்தவர் சி.வி.விக்னேஸ்வரன். 2015 ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் அவரின் கலகக்குரல் சற்று பலமாகவே ஒலித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலகக்குரல் எழுப்பியதோடு நின்றுவிடாமல், கூட்டமைப்பிலிருந்து விலகிவந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அமைத்துக் கொண்டார்.

(“கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

பந்தாடப்படும் கேப்பாப்புலவு

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு, சூரியபுரம், சீனியாமோட்டை மற்றும் பிரம்படி ஆகிய பகுதியில் வசித்த மக்கள், யுத்தம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெயர்ந்த நிலையில், 2009 ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதிகளில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினர். இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள், வவுனியா, செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், நலன்புரி நிலையங்களை மூட அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அம்மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

(“பந்தாடப்படும் கேப்பாப்புலவு” தொடர்ந்து வாசிக்க…)

‛பூமியை போன்று 7 புதிய கோள்

‛பூமியை போன்று 7 புதிய கோள்களை கண்டுபிடித்ததாகவும், இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது’ என நாசா அறிவித்துள்ளது.

7 புதிய கோள்கள்:

சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் அறியும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்சர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிய மைல் கல்:

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போலவே மனிதர்கள் வசிப்பதற்கு தகுந்த சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இக்கோள்கள் பூமியிலிருந்து 39 ஒளி ஆண்டு தொலைவில் அமைந்துள்ளது. நாசா ஒளிபரப்பில் இந்த நேரலையை 6 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

பற்குணம் (பகுதி 106 )

திரு வின்சன்ட் பெரேரா அவர்கள் ஜே.வி.பி யின் செயற்பாடுகள் காரணமாக அவர்களின் அச்சுறுத்தல்களில் இருந்து தப்பவே மறைவாக அந்த வீட்டில் குடியிருந்தார்.அவர் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாது.நாங்கள் நேரே சந்தித்தால் சிரிப்பார்.அவருடன் உறவாட யாரும் போவதில்லை.அவர் மனைவி என் மனைவியுடன் கதைப்பார்.அவ்வளவு தான்.சில நேரங்களில் மனைவியுடன் பஸ்சில் சந்தைக்கு செல்வது அவருக்குப் பிடிக்கும்.செல்வார்.அப்போது என் திட்டம் நாட்டைவிட்டு வெளியேறுவதாக இருந்தது.இது அவர் மனைவிக்கு தெரியும்.

(“பற்குணம் (பகுதி 106 )” தொடர்ந்து வாசிக்க…)

குழந்தைகளைக் குதறும் கழுகுகள்: அவதானம் மிக அவசியம்!

(எஸ். ஹமீத்)
அண்மைக் காலங்களில் குழந்தைகள் மீதான காமுகர்களினதும் கள்வர்களினதும் வக்கிரங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. ஒன்றுமேயறியாத பச்சிளம் குழந்தைகள் தொடக்கம் பதின்ம வயதுடைய சிறார்களின் மீதான-குறிப்பாகச் சிறுமிகள் மீதான  கொடுமைகளும் கொடூரங்களும் பாலியல் வன்மங்களும் அதன் விளைவான கொலைகளும் எல்லா நாடுகளிலும் ஒப்பீட்டளவில் கூடிக் கொண்டே வருகின்றன. இந்த நிலைமையில் தமது குழந்தைகளின் மீது பெற்றோரும் உடன் பிறப்புகளும் மிக அவதானமாக இருப்பது அத்தியாவசியமாகும்.

(“குழந்தைகளைக் குதறும் கழுகுகள்: அவதானம் மிக அவசியம்!” தொடர்ந்து வாசிக்க…)