இராணுவ முகாமை அகற்ற வேண்டாமென போராட்டம்

கிளிநொச்சி ஆணை விழுந்தான் பகுதியில் உள்ள ராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என அப் பகுதியைச் சேர்ந்த சிலர் இன்றைய(01/09) தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள 551 வது படைப்பிரிவு முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

பஸ் கட்டணங்களும் அதிகரித்தன

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இந்த கட்டண அதிகரிப்பு நாளை (02) முதல் அமுலுக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகுமாரி மரணம்: 3 பொலிஸார் கைது

வெலிக்கடையில் பொலிஸ் காவலில் வைத்து பணிப்பெண்  ராஜன் ராஜகுமாரி (வயது 42) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவில் பார்வையிழந்துள்ளதுடன் இருவர் பூரண பார்வை இழந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.