பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வீதிகளைத் திருத்துவதற்குத் தேவையான நிதியை வடக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அத்தியாவசியத் தேவையாகக் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பதே எமது தற்போதைய முக்கிய இலக்காகும் என மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.
செலான் வங்கியின் ATMகளில் புதிய வசதி
டெலர் இயந்திரங்கள் (ATMகள்), பண வைப்பு இயந்திரங்கள் (CDMகள்) மற்றும் காசோலை வைப்பு kioskகள் (CDKகள்) ஆகியவற்றை கொண்ட தனது பரந்த வலையமைப்பு ஊடாக வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்றாட வங்கிச் சேவையில் கட்டுப்பாட்டையும் சௌகரியத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இச் சேவைகளில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நாணயப்பெறுமதிகளை தேர்ந்தெடுக்கும் திறனும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு
தனி சில்லில் மோட்டார் சைக்கிளோட்டிய 18 பேர் கைது
நிவாரண பிரச்சினையாயின் 1904 க்கு அழைக்கவும்
நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகள் கிடைக்காததில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், ‘1904’ என்ற ஹாட்லைன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கலாம் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். பாதுகாப்பான முகாம்களில் இயங்கும் பாடசாலை மற்றும் இன்னும் ஆபத்தில் உள்ள பள்ளிகள் தவிர, அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 16 அன்று மீண்டும் திறக்கப்படும் என்றும் ஆணையர் ஜெனரல் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் கட்டைக்காட்டிற்கு விஜயம்
ஒரே பார்வையில் அனர்த்த பேரழிவு
இலங்கையை தாக்கிய திட்வா புயல் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்களை ஒரே பார்வையில் தருகின்றோம்…
* குடும்பங்கள்: 391,401
* நபர்கள்: 1,364,481
* மரணம்: 643
* காணவில்லை: 184
* முழுமையான வீடுகள் சேதம்: 6164
* பகுதியளவில் வீடுகள் சேதம்: 112,110
* பாதுகாப்பான நிலயங்கள்: 796
* குடும்பங்கள்: 23,041
* நபர்கள்: 72,911
தகவல்: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்.
“ உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்”
அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு விடயம் என்றும், அத்தகைய சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் பொறுப்பும் ஓடிப்போவதோ அல்லது பீதியுடன் பார்ப்பதோ அல்ல, மாறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.



