போருக்கு பின்னரான வடக்கின் குற்றச்செயல்கள
அண்மைக்காலமாக வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுக்கள், கொலை, கொள்ளை, சிறுவர்கள் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனை போன்ற சமூக விரோதச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அறியக் கிடைக்கின்றது. இந்த குற்றச்செயல்கள் அனைத்துமே யாழ் குடாநாட்டில் மாத்திரமன்றி, நாடு தழுவிய ரீதியில் நடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எனினும் யாழ் குடாநாடு தவிர்ந்த, நாட்டின் ஏனைய நிலப்பரப்பு மற்றும் அங்கு வாழும் மக்கள் தொகையினை, யாழ் குடாநாடு போன்ற மிகச் சின்னஞ்சிறிய நிலப்பரப்பில் வாழும் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், யாழ் குடாநாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் அதிகமென பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
(“வெளிவந்து விட்டது வானவில் இதழ் 66” தொடர்ந்து வாசிக்க…)