தமக்கு எதிரானதாகக் கருதப்படும் வகையில் அமையவிருந்த ஒரு சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் தமது விசாரணையாக, உள்ளக விசாரணையாக மாற்றிக் கொண்டுள்ளது. அதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதாக, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இம்முறை அவ் அரசாங்கத்தின் அனுசரணையுடனான ஒரு பிரேரணையே முன்வைக்கப்பட்டுள்ளது. அது இன்று நிறைவேற்றப்படவிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்ட் ராத் அல் ஹுஸைன், இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக அவரது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கையை, மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்தார். தேசிய மற்றும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றமொன்றின் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குற்ற விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அதில் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது.
(“ஐ.நா.அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே” தொடர்ந்து வாசிக்க…)