ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது

(போராளிகளை நினைவு கூர்வதற்கு ஒரு பொதுத் தினம் ஒன்று கண்டறியப்படவேண்டும். இதில் ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்து மரணித்த அனைவரும் நினைவு கூரப்படவேண்டும் என்பதே சூத்திரம் இணையத்தளத்தின் நிலைப்பாடு ஆகும். இதன் ஆசிரியர் இந்தக்கருத்தை பத்துவருடங்களுக்கு மேலாக பல தளங்களிலும் வலியுறுத்தி வருகின்றார். கருணாகரனின் இக்கட்டுரை புலிகளின் மாவீரர் தினத்தை மட்டும் பேசுவதில் தனது கவனத்தை செலுத்தியிருக்கின்றது ஒரு பன்முகப்படுதப்பட்ட தன்மை வணக்கம் செலுத்துவதிலிருந்தாவது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை சூத்திரம் மீண்டும் வலியுறுத்துகின்றது – ஆர்)

(கருணாகரன் )

விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில், போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், கடந்த மாதம் 27 ஆம் திகதி நிகழ்ந்திருக்கும் மாவீரர் நாள் நிகழ்வு, அது முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டபோதிலும், அந்த நிகழ்வின் அரசியல் பரிமாணம் மிகவும் விசாலமாகக் காணப்படுகின்றது. அந்த நிகழ்வையொட்டி, தமிழ் மக்களிடத்தில், குறிப்பாக மாவீரர் குடும்பங்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்நிலைகளும் அபிப்பிராயங்களும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது. இந்தக் கட்டுரை அவற்றைப் பற்றிய கவனத்தையே ஈர்க்கிறது.

(“ஒரு பண்பாட்டுச் சிதைவுக்கு துணைபோகக் கூடாது” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் தீர்வு பற்றி : ‘சம்பந்தன் உறுதிப்படுத்திவிட்டார்’

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், அதிகாரப் பகிர்வு தொடர்பில் தெரிவித்த கருத்தானது, அவர் ஒரு ஜனநாயகவாதி என்பதை உறுதிபடுத்திவிட்டார்” என, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமை அலுவலகத்தில், நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதிகாரப்பகிர்வு மற்றும் ஆளுநர் நீக்கம் தொடர்பான கூட்டமைப்பின் கருத்து தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“அரசியல் தீர்வு பற்றி : ‘சம்பந்தன் உறுதிப்படுத்திவிட்டார்’” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா தீர்மானம் நிறைவேற்றம்; சிரியாவுக்குள் ஐ.நா கண்காணிப்பாளர்கள்

சிரியாவில் முற்றுகைக்குள்ளாகியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதைக் கண்காணிக்கவும் நகரங்களில் எஞ்சியுள்ள மக்களின் நலன்களைக் கண்காணிக்கவும், ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கான தீர்மானத்தை, ஐ.நா பாதுகாப்புச் சபை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை, ஐக்கிய அமெரிக்கா கொண்டுவரவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட ரஷ்யா, தன் சார்பில் புதிய தீர்மானமொன்றைச் சமர்ப்பிக்க முடிவு செய்திருந்தது. எனினும், பிரான்ஸும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த தீர்மானம், திங்கட்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அலெப்போவில் ஏற்கெனவே காணப்படும் 100க்கும் அதிகமாக ஐ.நா மனிதாபிமானப் பணியாளர்கள், இதற்காகப் பயன்படுத்தப்பட முடியுமென, ஐ.நா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(“ஐ.நா தீர்மானம் நிறைவேற்றம்; சிரியாவுக்குள் ஐ.நா கண்காணிப்பாளர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

‘மைத்திரி மரணிப்பார்: கோட்டா ஜனாதிபதியாவார்’

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரி மாதத்துக்குள் இயற்கையாக மரணமடைவார் என்றும், அதன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அத்தேர்தலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ வெல்வார் என்றும் ஜோதிடரினால் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமையாது, சாஸ்திர சதியாகும் என்று ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக வெளியாகியுள்ள ஜோதிடரின், ஜாதகக் கணிப்பின் பின்னணியைக் கண்டறிவதற்காக அது தொடர்பான காணொளி, பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

(“‘மைத்திரி மரணிப்பார்: கோட்டா ஜனாதிபதியாவார்’” தொடர்ந்து வாசிக்க…)

நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சீனா

தென்சீனக் கடல் பகுதி முழு வதையும் சீனா சொந்தம் கொண் டாடி வருகிறது. ஆனால் அந்தப் பகுதி சர்வதேச கடல் எல்லை என்று அமெரிக்கா வாதிட்டு வருகி றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் அருகே தென்சீனக் கடலில் மிதந்த அமெரிக்க கடற் படையின் ஆளில்லா நீர்மூழ்கியை சீன கடற்படை கைப்பற்றியது. சீன கடல் பகுதியில் அமெரிக்கா உளவு பணியில் ஈடுபட்டதாக அந்த நாடு குற்றம் சாட்டியது.

(“நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சீனா” தொடர்ந்து வாசிக்க…)

துருக்கிக்கான ரஷ்ய தூதர் சுட்டுக்கொலை

துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்ற ஒரு புகைப்படக் கண்காட்சி விழாவில் உரையாற்றிக் கொண்டிருந்த துருக்கிக்கான ரஷ்ய தூதரை மர்ம நபர் ஒருவர் சுட்டுக் கொன்றார். தூதரை சுட்டுக்கொன்ற நபரை அங்கிருந்த மற்ற போலீஸார் சுட்டு வீழ்த்தினர். இச்சம்பவம் தொடர்பாக துருக்கியின் தேசிய தொலைக்காட்சியான என்டிவி, “துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் ‘அல்லாஹூ அக்பர்’ என துதிபாடிவிட்டு துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். பின்னர் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சில புகைப்படங்களையும் அவர் சுட்டு வீழ்த்தினார். திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பீதியடைந்த மக்கள் பாதுகாப்புக்காக அங்குமிங்கும் ஓடியதால் அரங்கத்தில் பதற்றம் நிலவியது. துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் மூன்று பேர் காயமடைந்தனர்” எனத் தெரிவித்தது.

(“துருக்கிக்கான ரஷ்ய தூதர் சுட்டுக்கொலை” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C. (பகுதி 88 )

1987 இல் வடமராட்சி லிபரேசன் ஒப்பிரேசன் தொடங்கியது.இந்தசூழ்நிலையில் எங்கள் அய்யா,அம்மா இருவரும் கடும் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.அந்த யுத்த சூழ்நிலையில் பதவிக்கான கடமைகள் ஒருபுறம்,பெற்றவர்களுக்கான கடமை மறுபுறம்.ஆனால் பற்குணம் இரண்டையும் விடவில்லை.

(“பற்குணம் A.F.C. (பகுதி 88 )” தொடர்ந்து வாசிக்க…)

கிறித்தவச் சமயத்தை வாழ்க்கைக்கு மேம்பாடுகள் தரும் நிறுவனமாகக் கருதியே அதனைத் தழுவினார்கள்

தென் தமிழ்நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் நுழைந்த கிறித்தவச் சமயத்தை அப்பகுதி மக்கள் தங்கள் உலகியல் வாழ்க்கைக்கு மேம்பாடுகள் தரும் நிறுவனமாகக் கருதியே அதனைத் தழுவினார்கள் என்பதை நாம் காணமுடியும். குறிப்பாகக் கிறித்தவ சமயத்தை நாடிச் சென்ற விளிம்புநிலை மக்களான தலித்துகளும், சாணார்கள், பரதவர்கள், நாடார்கள் போன்ற இடைநிலைச் சாதியினரும் தங்களின் மரபான வாழ்க்கை முறையைப் பெருமளவில் மாற்றிக் கொள்ளாமலேயே நகர்ந்தார்கள் என்பதைப் பல சமூகவியல் மற்றும் நாட்டார் வழக்காற்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஏற்கெனவே இருந்த இசக்கியம்மன், சுடலை, பேராச்சி, சொரிமுத்தய்யனார் போன்ற தெய்வங்களின் பெயர்களை நீக்கி விட்டு மரியையும், சூசையப்பரையும், சலோமியையும் பொருத்திக் கொண்டார்கள் என்பதும் அந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டும் உண்மைகள்.

(அ. ராமசாமி)

துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் மீது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்தார். துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். கலைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்றிய தொடங்கிய போது, சிரியாவின் அலெப்போ நகர் குறித்த தகவலுடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய ஒருவர் கார்லோஃபை நோக்கி சுட்டதாக தகவல்கள் தெரிக்கின்றன.

மீண்டும் இந்திய – இலங்கை பயணிகள் கப்பல் சேவை

வடக்கில் இருந்து இந்தியாவுக்கு 10 நாட்களுக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்துவதற்கு 32 வருடங்களுக்குப் பிறகு, இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள ​இந்து கோவிலில் இடம்பெறவுள்ள நிகழ்வுக்காக வடக்கில் இருந்து இந்து பக்தர்களை கொண்டு செல்லதற்காக அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

(“மீண்டும் இந்திய – இலங்கை பயணிகள் கப்பல் சேவை” தொடர்ந்து வாசிக்க…)