இருபத்தி நான்கு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் !! பொலன்னறுவை ( அக்பர்புரம் , அகமட்புரம் ) படுகொலைகள் (15/10/1992)

(எஸ்.எம்.எம்.பஷீர்)

இதே திகதியில் இன்றைக்கு சுமார் 21 வருடங்களுக்கு முன் அதிகாலைப் பொழுது புலர இன்னும் ஓரிரு மணித்தியாலங்கள் இருந்தன. இன்னும் இருள் மண்டிக் கிடக்கிறது. கதிரவன் நாளை வழக்கம் போல் வைகறையில் எழுவான் என்ற நம்பிக்கையுடன்தான் அகமட்புரம் , அக்பர்புரம் கிராம மக்கள் அதற்கு முன் தினம் துயிலச் சென்றிருந்தனர்.

(“இருபத்தி நான்கு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் !! பொலன்னறுவை ( அக்பர்புரம் , அகமட்புரம் ) படுகொலைகள் (15/10/1992)” தொடர்ந்து வாசிக்க…)

டொய்ச்செ பான்க் நெருக்கடி: பிணையெடுப்பது யார்?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எல்லா உண்மைகளையும் பொய்களால் மறைக்கவியலாது. எத்தனை முறை திருப்பிச் சொன்னாலும் பொய்கள் உண்மையாகா; காலம் உண்மையை மீளமீள நினைவுபடுத்தும்; உண்மையின் வலிமை அது. பொதுக் கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்ற இக்காலத்தில் உண்மைகளும் கட்டமைக்கப்படுகின்றன. இதனால் உண்மை எது? உண்மைபோல் தெரிவது எது? என்ற மயக்கம் இயல்பாகவே வருகிறது. இம்மயக்கங்களைத் தாண்டி உண்மையை அறிவது கொஞ்சம் கடினம். ஆனால் உண்மையை அறியும் அவா அதைக் கண்டுணர உதவலாம்.

(“டொய்ச்செ பான்க் நெருக்கடி: பிணையெடுப்பது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

இன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் பிறந்தநாள்

 

யார் இந்த கன்னங்கரா? வரலாற்றின் பக்கங்கள் மக்கள் சேவகர்களை மறைத்து இனவாதிகளையும் பித்தலாட்டக்காரர்களையும் மக்கள் விரோத அரசியல் செய்து மக்களை அழிவுக்கு தள்ளியவர்களையும் தலைவர்களாய் தந்தைகளாய் தளபதிகளாய் கொண்டாடிக்கொண்டிருக்கின்றது.

(“இன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் பிறந்தநாள்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் இந்துவத்துவா சிவசேனா….?

ஈழ‌த்தில், இந்து ம‌த‌வெறி சிவ‌ சேனாவின் கிளை அமைப்பு ஆர‌ம்பிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. முன்பு தீவிர‌ த‌மிழ்த் தேசிய‌ம் பேசிய‌ ம‌ற‌வ‌ன்புல‌வு ச‌ச்சிதான‌ந்த‌ம் த‌லைமையில், இந்த‌ ஈழ‌த்து சிவ‌ சேனா இய‌ங்க‌வுள்ள‌து. ம‌ற‌வ‌ன்புல‌வு ச‌ச்சிதான‌ந்த‌ம், புலிக‌ள் இருந்த கால‌த்தில் தீவிர‌ புலி விசுவாசியாக‌ இருந்த‌வ‌ர். த‌ற்போது சிறில‌ங்கா அர‌சுட‌ன் நெருக்க‌மாகியுள்ளார்.

(“இலங்கையில் இந்துவத்துவா சிவசேனா….?” தொடர்ந்து வாசிக்க…)

C.W.W. Kannangara அவர்களின் பிறந்த நாள் இன்று….

ஏழைகளும் முக்கியம் சாதி குறைந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் கல்வியை பெற்றுக்கொள்ள இலங்கையில் வழிவகுத்தவர் தான் இந்த Father of Free Education in Sri Lanka ….

Dr C.W.W. Kannangara என்பவர்…….

இலங்கையில் ஏழை மக்களின் மற்றும் சாதி அமைப்பு முறையால் பாதிக்க பட்டவர்களின் சமூக விடுதலைக்காக உழைத்தவர்கள் சிங்கள அரசியல் மற்றும் புத்தி ஜீவிகளே……

(“C.W.W. Kannangara அவர்களின் பிறந்த நாள் இன்று….” தொடர்ந்து வாசிக்க…)

தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்?

வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால் முன்னிலையில் வைத்து கௌரவமளிக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரன், வடக்கு – கிழக்கினை பிரதானப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிற்குள்
இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரின் பெரும் ஆதரவோடு அழைத்து வரப்பட்டார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிக்கப்படும் வரையில், அவர் யாரென்பது வடக்கு மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், கூட்டமைப்பின் ‘முதலமைச்சர் வேட்பாளர்’ என்கிற தகுதி மாத்திரமே அவருக்கு அங்கிகாரம் பெற்றுக் கொடுத்தது. அதுவே, தமிழ்த் தேசிய அரசியலில் அவர் இன்று அடைந்திருக்கின்ற அடைவின் ஆரம்பமும் தொடர்ச்சியும்! இது முன்கதைச் சுருக்கம்.

(“தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்?” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் கட்சி வருமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பாரா? எப்போது அவர் அதனை ஆரம்பிப்பார்? யார் அதன் தலைவராகப் போகிறார்? மஹிந்தவே தானா? அல்லது அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவா? இது போன்ற பல கேள்விகளை அண்மைக் காலமாக அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் கேட்ட வண்ணமே இருக்கிறார்கள்.

(“மஹிந்தவின் கட்சி வருமா?” தொடர்ந்து வாசிக்க…)

இக்பால் என்னும் இஸ்லாமிய தோழர்

நான் இவரைப் இதுவரையில் பார்த்தது இல்லை. ஆனால் இவரை அறிந்திருக்கிறேன்.இஸ்லாமிய மக்களை அவதூறாக கதைக்கும் பல தமிழ் பேசும் சைவர்களை கண்டிருக்கிறேன்.அவர்களுக்காக தோழர் இக்பால் பற்றியும் இஸ்லாமியர் பற்றியும் சிறு பதிவு. 1966 வடபகுதியில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இறுதியாக 1970 மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேச போராட்டம் நடந்தது.இதற்கு சீன சார்ப்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதுணையாக நின்றனர்.இந்த போராட்டத்தை சீர்குலைக்க தமிழரசுக்கட்சியினர் தீவிரம் காட்டினர்.ஆனாலும் தடுக்க முடியவில்லை.போராட்டம் உறுதியானது.

(“இக்பால் என்னும் இஸ்லாமிய தோழர்” தொடர்ந்து வாசிக்க…)

இந்த அரசியல் கலாச்சாரம் செழித்து வளரட்டும்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நல நிலவரத்தை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து வந்திருப்பது தமிழக அரசியல் சூழலில் வரவேற்க வேண்டிய அரசியல் கலாச்சாரம் ஆகும்.

(“இந்த அரசியல் கலாச்சாரம் செழித்து வளரட்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி நடைபெறுவது புலிப்பினாமிகளுக்கும் அவர்களோடு சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கும் வேப்பங்காயாக கசக்கிறது. வடகிழக்கில் அமைதி இல்லை, சுமூகமான சூழல் இல்லை. தமிழர்களுக்குச் சுதந்திரம் இல்லை.தமிழர்களை இலங்கை அரசு சித்திரவதை செய்கிறது என்றேல்லாம் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய பாடகர் ஒருவரின் இசை நிகழ்ச்சி வடக்கில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது இவர்களின் பிரச்சாரத்தைப் பொய்யாக்குகிறது.

(“யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)