புலிகளின் வதை முகாம் இது

ஒருவரைப் படுக்க வைத்து இந்த இரும்பு வளையத்தை காலில் வைத்துப் பூட்டிவிட்டால் அவரால் அசைய முடியாது எழுந்திருக்க முடியாது. இப்படியான கொடூரமான சித்திரவதை பொல்பொட் பாணியில் வன்னியில் புலிகளால் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சித்திரவதை முகாம் முல்லைத்தீவுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

(“புலிகளின் வதை முகாம் இது” தொடர்ந்து வாசிக்க…)

நல்லாட்சியில் ஓட்டை விழுந்து விட்டதா?

மைத்திரிபால சிறிசேன 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, ஒன்றரை ஆண்டுகளில் அரசியல்த் தூய்மைக்கும் ஊழலுக்கும் எதிராகத் தமக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டிருந்தார் என்றால் ஒரே ஒரு உரையின் மூலம் அவரே, அந்த பெயரில் 90 சத வீதத்தைக் களங்கப்படுத்திக் கொண்டார் போல்தான் தெரிகிறது.

(“நல்லாட்சியில் ஓட்டை விழுந்து விட்டதா?” தொடர்ந்து வாசிக்க…)

பின்னப்பட்ட சதிவலை (Part 2)

2001 ஜூலை 24ல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலானது இலங்கை அரசுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது போலவே 2001 செப்டெம்பர் 11ற்கு பின்பு புலிகளுக்கும் பாதகமாகவே அமைந்தது. அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் புலிகளும் உள்ளடக்கபட்டனர். பயங்கரவாத எதிர்ப்பு போரில் இறங்கியிருந்த அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இலங்கையிலும் நேரடியாக தலையிடும் புறச்சூழல் உருவனது. இவ்வாறு தமக்கு பாதகமாக சூழல் உருவானதை சமாளிக்க ஏதாவது ஒன்றை செய்யவேடிய கட்டாயத்தினுள் புலிகள் தள்ளப்படனர்.ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடங்கிய நோர்வே அனுசரணை சமாதான முயற்சிகளை பற்றிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அத்தோடு தமது ஆயுத போராட்டமானது முற்றிலும் தமிழரின் சுயநிர்ணயம் சார்ந்த்தே அன்றி இலங்கையின் இறையாண்மை மீது நடத்தப்படுகின்ற வலிந்த பயங்கரவாத தாக்குதல் அல்ல என்கின்ற தோற்றத்தையும் சர்வதேச அரங்கில் உருவாக்கவேண்டிய தேவை புலிகளுக்கு ஏற்பட்டது. எனவேதான் அவர்கள் 1980களில் தங்களால் அழித்தொழிக்கப்பட்ட மென் அரசியலுக்கு உயிர்கொடுக்க முன்வந்தனர். புதிதாக உயிரூட்டப்பட்ட மென் அரசியலுக்கு தமது உறுப்பினர்களையோ அல்லது தமது ஆதரவாளர்களையோ பயன்படுத்தி கொண்டால் அது தாம் கூறமுயலும் செய்தியின் மீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் வேறு நபர்களையே இதற்காக பயன்படுத்தவேண்டியிருந்தது.

(“பின்னப்பட்ட சதிவலை (Part 2)” தொடர்ந்து வாசிக்க…)

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாத விக்கி வானம் ஏறி வைகுண்டம் போவாராம்.

ஒருபுறம் வடக்கு மாகாண சபை சீரழிந்து கிடக்கின்றது. ஆனால் முதலமைச்சரின் லண்டன் பயணமும் அதையொட்டிய “இங்கிலாந்து கிங்ஸ்டன் நகரும் யாழ்ப்பாணமும்” இரட்டை நகர்களாக பிரகடனப்படுத்தப்பட்டதையொட்டி ஆரவாரங்கள் தலை தூக்கியுள்ளன. எதோ தமிழீழம் கிடைத்ததுபோல் சர்வதேச விளம்பரங்கள் பறக்கின்றன. எனக்கு புரியவில்லை தென்னிலங்கையில் இருந்து முஸ்லிம்களும் சிங்களவர்களும் வந்து செல்வதால் யாழ்ப்பாணத்தின் புனிதம் கெட்டுப்போகின்றது என்று அடிக்கடி ஊளையிடும் தமிழ் தேசியவாதிகளும் அவர்களது ஊடகங்களும் இப்போது என்ன சொல்கின்றன? இங்கிலாந்து கிங்ஸ்டன் நகரின் நவீன ஆடவர்களும் மங்கையர்களும் இனி அடிக்கடி யாழ்மண்ணில் காலடி பதிப்பார்களே அவர்களுடன் வந்து சேர போகும் புதிய கலாசாரங்களை எப்படி எதிர்கொள்ளப்போகின்றது யாழ்மண்?

(M R Stalin Gnanam)

புலிகளின் கொலைகாரச் செயற்பாடுகள் இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே ஆரப்பித்த ஒன்று

இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகளின் பாசிச வெறிக்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பலியாகினர். கபூர் 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து வாழ்ந்தவர், கபூர் ஒரு உன்னதமான போராளி. முற்போக்கு சிந்தனை கொண்டவர். கபூரின் குடும்பமே அப்படித்தான். கபூரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். ஈ பி ஆர் எல் எஃப் தடை செய்யப்பட்ட வேளையில் தோழர் கபூர் புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டார்.

(“புலிகளின் கொலைகாரச் செயற்பாடுகள் இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே ஆரப்பித்த ஒன்று” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை

 

சாரு மஜூம்தார் 1919ஆம் ஆண்டு வாரணாசியில் பிறந்தார். தேதி சரியாகத் தெரியவில்லை. அது ஜெய்த்திசியா என்ற வங்காள மாதம். ஆங்கிலக் கணக்குப்படி மே-ஜூன் மாதம். அவருக்கு 7 வயது இருக்கும்போது சிலிகுரியில் உள்ள அவரின் பெற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

(“ஒரு புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை” தொடர்ந்து வாசிக்க…)

730 சம்பள உயர்விற்குள் சுருக்கிக் கொண்டது மலையக தொழிலாளர்கள் சங்கம்…?

(Sinnapalaniandy Sachidanandam and Saakaran)

ரூபா 1000க்கு ஒரு சதம் குறைந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் சுற்றிச் சுற்றி பல்வேறு பேச்சுவார்த்தைச் சுற்றுக்களில் சண்டையிட்டு எல்லாமே தோல்வியில் முடிவடைந்த படியால் கிடைத்தவரை லாபம் என்ற வகையில் வேறு வழியில்லாமல் ரூபா 730 க்கு நிலுவை எதுவுமே பெற்றுத் தர வக்கற்ற நிலையில் இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிகப் பழைய தோட்டத் தொழிலாளர் சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உரிமையாளர் தனது சகா வடிவேல் சுரேஷுடன் சமமாக அமர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வெட்கக்கேடு!

(“730 சம்பள உயர்விற்குள் சுருக்கிக் கொண்டது மலையக தொழிலாளர்கள் சங்கம்…?” தொடர்ந்து வாசிக்க…)

பின்னப்பட்ட சதிவலை (Part 1)

1970களில் பத்துடன் பதினொன்றாக தொடங்கிய தமிழீழ விடுதலை புலிகள் ( Liberation Tigers of Tamil Ealam-LTTE ) இயக்கம் 1980களில் ஏனைய இயக்கங்களை பிரதான அரங்கில் இருந்து முடக்கியதன் மூலம் தனிப்பெரும் இயக்கமாக தன்னை உருவாக்கிக்கொண்டது. அத்துடன் 1990களின் ஆரம்பத்தில் இருந்து தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்கள் முட்டுமே என்கின்ற கருத்தை தீவிரமாக வலியுறுத்தியத்துடன் மிதவாத தமிழ் அரசியலையும் முடக்கத்தொடங்கினர். வெறுமனே போராட்ட இயக்கம் என்கின்ற வடிவத்தில் இருந்து மாறி அரசியல் இயக்கமாகவும் தம்மை வெளிக்காட்ட முயன்றனர். புலிகளால் முன்னெடுக்கப்பட்ட வன் அரசியலானது ஒரு கட்டத்தில் இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசு என்னும் இறைமையுள்ள ஒரு நாட்டின் அரசியலையே தீர்மாணிக்கின்ற சக்தியாக உருப்பெற்றதுடன் இந்த நாட்டின் இருபது மில்லியன் மக்களின் தலைவிதியை தீர்மாணிக்கின்ற ஒரு சக்தியாக புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாகவும் வழிவகுத்தது.இலங்கை அரசியல், பொருளாதார, சமூக அமைப்பை மட்டுமல்லாமல் அரசு படைகளுடனான் போரின் போக்கு, போர்நிறுத்தம், அரசுடனான சமாதான பேச்சுக்கள் என்பவற்றைக்கூட அவரே தீர்மாணித்த்திருந்தார்.

(“பின்னப்பட்ட சதிவலை (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

பின்னோக்கி செல்லும் நினைவலைகள்!

முப்பத்தி எட்டு ஆண்டுகள் கடந்தும் நினைவில் நீங்காது நிலைத்து நிற்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை, மன ஆதங்கத்தை கலந்து தரும் தருணத்து பதிவு இது. கல்வியின் உச்ச நுழைவாயிலான பட்டம் பெறல் என்ற, பல்கலைக்கழகம் செல்லும் தெரிவு கிடைத்த மகிழ்ச்சியை எனக்கு தந்த ஆண்டு 1978. அதே ஆண்டில் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட, அனர்த்தத்தை நேரில் கண்டது ஆதங்கம். ஆனால் அழிவில் இருந்து மீண்டுவர கிழக்கை நோக்கிய வடக்கு இளையவர்களின் வருகை பேருவகை. கட்சி அரசியலுக்கு அப்பால் வடக்கும் கிழக்கும் அதுவரை மனதளவில், பிரதேசவாதம் இன்றி செயல்ப்படவில்லை. பின்பு கட்சி அரசியலில் கூட செல்லையா இராஜதுரை சந்தித்ததும், தலைமைத்துவ மோகத்தால் வந்த பிரதேசவாதம் என்பது மறுப்பதற்கு இல்லை.

(“பின்னோக்கி செல்லும் நினைவலைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 3)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

அந்த நேரம் EPRLF  தடை செய்யப்பட்ட இயக்கமாக புலிகளால்  அறிவிக்கப்பட்டது.அவ்வேளை சிவகாமியும்  கண்காணிக்கப்பட்டாள். தடைசெய்யப்பட்ட இயக்கத்திலிருந்த போராளிகள் தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் சாப்பிட வழியற்ற நிலையில் நோயும் தாக்கி காடுகளுக்குள் மறைந்து வாழ்ந்தார்கள். அவ்வேளை சிவகாமியால்  சிலர் பாதுகாக்கப்பட்டு வேறிடங்களுக்கு அனுப்பப் பட்டார்கள். இந்த வேளை தான் புலிகள் காட்டிக்கொடுக்குப்பின் சிவகாமியைக் கைது செய்து 49 நாட்கள் சித்திரவதை செய்தார்கள்.உடல் சித்திரவதை இல்லாமல் விசாரணை என்ற போர்வையில் நிறைய மன உழைச்சலை ஏற்படுத்தினார்கள்.தனது சொந்தக் கிராமத்திலிருந்து சிவகாமி மேலதிக விசாரணைக்காக  யாழ்ப்பாணம் இருபாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர விசாரணக்குட்படுத்தப்பட்டாள்.

(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)