மன்னார் மற்றும் முல்லைத்தீவில் டெலோ தேர்தல் விண்ணப்பம் சமர்ப்பிக்க தவறியதால், அவர்கள் உள்வாங்கப்படாமல் வடக்கின் உறுப்பினர்களை ஏனைய இரண்டு இயக்கங்களும் பகிர்ந்தன. இருந்தும் நாபா டெலோ உள்வாங்கப்பட வேண்டும் என்ற விருப்பில், ஈ பி ஆர் எல் எப் க்கு கிடைத்த ஆசனங்களை அவர்களுடன் பகிரவிரும்பினார். தாஜ் சமுத்திரா ஹோட்டலில் டெலோ சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையில் கலந்துரையாடிய போது, அவரின் குறி பேரவை தலைவர் பதவியாகவே இருந்தது. ஐந்து உறுப்பினர்கள் மட்டும் தர முடியும் என்ற முடிவை ஏற்காமல் அவர்கள் வெளியேறினர். ஆக வடக்கு கிழக்கு மாகாண பேரவைதலைவர் பதவி டெலோ பேச்சாளர், ஆலோசகர் சட்டத்தரணி சிரிகாந்தாவால் விரும்பபட்டு ஆனால் மறுக்கப்பட்டு, இளங்கோ என்கின்ற ரவீந்திரனுக்கு வழங்கப்பட்டு பின் அவரால் ஏற்க தயக்கம் காட்டப்பட்டதால் என் வசம் வந்தது. அது எனக்கு விரும்பி வழங்கப்பட்டதல்ல.
(“மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி 3]” தொடர்ந்து வாசிக்க…)