உலகத் தமிழ் நாடக அரங்கு

உலகத் தமிழ் அரங்க ஆராய்ச்சி மையம்

தமிழ் நாடக அரங்கு இன்று உலகம் தழுவிய ஒன்றாய் பரந்து பட்ட ஒரு தளத்தில் உரையாடலுக்கான காத்திரமான செல்நெறிகளையும், பல்வேறு விதமான சிந்தனைப்பள்ளிகளையும்(school of thorts) கொண்டது மரபு வழி அரங்குகளயும் நவீன நாடக ஆற்றுகைகளையும் , கொண்டதே நம் தமிழ் அரங்கு.

(“உலகத் தமிழ் நாடக அரங்கு” தொடர்ந்து வாசிக்க…)

சமூக வலைத்தளங்கள் பற்றிய கணிப்பு???

எம் மண்ணில் அண்மையில் அரங்கேறிய காட்சிப்பதிவு, சமூக வலை தளத்தில் வந்ததால், சிறுமி மீதான வன்முறை சம்பவம் அம்பலமாகி, நீதிமன்ற வாசலை தட்டியது. இதுவரை காலமும் அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கை பக்கம் திரும்பிய காட்சி படுத்தல், சிறுவர் துன்புறுத்தல் பக்கம் திரும்பியது, வைத்தியர் கையில் உள்ள கத்தியும், கசாப்பு கடைகாரன் கையில் உள்ள கத்தியும் செய்யும் செயல் பற்றிய, வித்தியாச செய்தியை சொல்கிறது.

(“சமூக வலைத்தளங்கள் பற்றிய கணிப்பு???” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைத் தமிழர் வாழ்வில் என்று ஒளி வரும்?

(அகிலன் கதிர்காமர்)
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நன்மைகளோ வளர்ச்சியோ ஏற்படவில்லை. தீர்மானங்கள் இயற்றப்படுவதும் அறிக்கைகள் வாசிக்கப்படுவதுமாக மாகாண சட்டப்பேரவை வெறும் பேச்சு மடமாகி விட்டது.

(“இலங்கைத் தமிழர் வாழ்வில் என்று ஒளி வரும்?” தொடர்ந்து வாசிக்க…)

நீறு பூத்த நெருப்பை பெரும் தீ ஆக்கலாமா?

அண்மையில் வட மாகாண சபை முதல்வர் முஸ்லிம் மக்கள் சம்மந்தமாக தெரிவித்த கருத்து விசனத்தை/விமர்சனத்தை ஏற்படுத்தியதை, இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கிகை மூலம் அறியமுடிகிறது. முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டபோதும், அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டாமல், தமது அரசியல் காரணங்களுக்காகவே தம்மை முஸ்லிம்களாக அடையாளம் காட்டுகின்றார்கள் என, வடமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் மட்டக்களப்பில் தெரிவித்த கருத்தை, றிசாட் பதியுதீன் தலைமை வகிக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் வை எல் எஸ் ஹமீட் விடுத்த, அறிக்கை மூலம், நீறு பூத்த நெருப்பாக இருந்த, முன்னர் அரங்கேறிய பல அராஜக சம்பவங்கள், வெளிப்பட தொடங்கி மீண்டும் இன நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக மாற்றும் நிலை தோன்றி உள்ளது.

(“நீறு பூத்த நெருப்பை பெரும் தீ ஆக்கலாமா?” தொடர்ந்து வாசிக்க…)

சாத்தான் ஒன்று வேதம் ஓதுது. அது சூத்திரச்சாத்தான்…

இன்று “எழுக தமிழ்” என்ற பெயரில் மாபெரும் இரு பேரணிகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றன. இந்த பேரணியில் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன், ஆனந்தி எழிலன், கஜேந்திரன் உட்ப்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
மறு புறத்தில் ஈபிடிபியும் “எழுக தமிழ்” என்ற பெயரில் ஒரு பேரணியை டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடத்தியது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரு பேரணியில், காணாமல் போனோர், கடத்தப்பட்டோரின் விசாரணைகள், இடம்பெற வேண்டும் என்பது பிரதான அம்சமாக இடம்பெற்றது.

(“சாத்தான் ஒன்று வேதம் ஓதுது. அது சூத்திரச்சாத்தான்…” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் நிகழ்வு ஒவ்வொரு தமிழர் கட்சிகளுக்குமான ஒரு ஒத்திகை நிகழ்வு….

யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் நிகழ்வு நடப்பதற்கு முன்னதாகவும் நடந்துகொண்டிருந்தபோதும் நடந்துமுடிந்த பின்னரும் பலவகையான விளம்பர சுவரொட்டிகளும் பத்திரிககைச் செய்திகளும் முகநூலில் வந்திருந்த பதிவுகளும் எதனைக் காட்டி நிற்கின்றன என்றால் அது சுய விளம்பர அரசியலாகவே காணப்படுகின்றன.

(“எழுக தமிழ் நிகழ்வு ஒவ்வொரு தமிழர் கட்சிகளுக்குமான ஒரு ஒத்திகை நிகழ்வு….” தொடர்ந்து வாசிக்க…)

முற்றவெளி நிகழ்வு குறிப்புகள் தமிழ் மக்கள் பேரவைக்கூட்டம்

 

ஆரம்பத்தில் பேரணிக்கு வந்த பொது மக்கள் உச்சி வெயில் காரணமாக மரநிழல்களில் ஒதுங்கியிருந்தனர்.பேரணி உள்நுழைந்ததும் அரைவாசி மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது மைதானத்திற்கு வந்தனர் மேடையிலும் பந்தல் போடப்படவில்லை.இறுதிவரை மக்கள் பிரதிநிதிகளும் வைத்தியர்களும் வெயிலில் நின்றனர். தண்ணீர்போத்தல்கள் இயன்றவரை வழங்கப்பட்டு தாகம் தணிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அருமை,அனைத்து மக்களை இணைந்து பாடுமாறு கேட்கப்பட்டது மாற்றத்திற்கான அறிகுறி. சிங்களமக்கள் ,ஆட்சியாளர்கள் இப்பிரகடனம் எதிரானது அல்ல,என்னும்போது அமைதியாக இருந்த மக்கள் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிரானதல்ல என முதலமைச்சர் பேசும்போது மைதானம் அதிர்ந்து.

(“முற்றவெளி நிகழ்வு குறிப்புகள் தமிழ் மக்கள் பேரவைக்கூட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ்: பூனைகள் அசைவம் சாப்பிடுவதில்லை என சபதம் எடுத்தன. அதனை எலிகளும் நம்பின.

 

இன்று “எழுக தமிழ்” என்ற பெயரில் மாபெரும் இரு பேரணிகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றன. இந்த பேரணியில் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன், ஆனந்தி எழிலன், கஜேந்திரன் உட்ப்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
மறு புறத்தில் ஈபிடிபியும் “எழுக தமிழ்” என்ற பெயரில் ஒரு பேரணியை டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடத்தியது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரு பேரணியில், காணாமல் போனோர், கடத்தப்பட்டோரின் விசாரணைகள், இடம்பெற வேண்டும் என்பது பிரதான அம்சமாக இடம்பெற்றது. மேலே பெயர் குறிப்பிடப்படும் நபர்களை முறையாக விசாரித்தாலே பல காணாமல், கடத்தப்பட்ட, கொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளிவரும். பலரை கடத்தி கொலை செய்த அல்லது அதற்கு காரணமான உத்தமர்கள், இன்று அவர்களை நினைத்து இரத்த கண்ணீர் வடிக்கிறார்கள்.
கோழி திருடியவன் கூட நின்று தேடிய இந்த இரு பிரமாண்டமான பேரணியில், “எழுந்தது தமிழ், வீழ்ந்தது சிங்களம்”
என்று கற்பனை குதிரையில் ஓடுவோம், ஓடிக்கொண்டிருப்போம்.

(SP Suba)

விக்னேஸ்வரனின் அரசியல்

ஆனாலும் விக்னேஸ்வரன் தான் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றமைக்கு மறைந்த “மாவீரன் ” பிரபாகரனும் ஒரு காரணம் என்று நம்புகிறார். மொத்தத்தில் அதி தீவிர தமிழ் அரசியல் நிலைப்பாடுகளை தம்மால் எடுக்க முடியும் , அதற்கான தீவிர தமிழ் மக்கள் அணியொன்று வடக்கு கிழக்கிலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ளது என்று அவர் நம்புகிறார் போலும் ! போதக் குறைக்கு தீவிர இனவாதம் பேசும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் வேறு அவருக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன.

(“விக்னேஸ்வரனின் அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்

மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லீம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட விடயங்கள்: ‘நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனது வீட்டின் பின்புறம் வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளினால் இப்போது பாதுகாக்கப்பட்ட காடாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு மண்வெட்டி செய்ய பிடி தேவை என்றால் கூட என்னால் பின்னுக்கு இருக்கிற மரத்தினை வெட்ட முடியாது. முசலி தெற்குப் பகுதியில் புதிதாகப் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் வடமாகாணத்தினைச் சேர்ந்தவர்களே. உங்களுடைய முதலமைச்சர் ஐயா ஏன் எங்களுடைய பிரச்சினைகள் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஒரு கை தட்டினால் சத்தம் கேட்குமா? எல்லாரும் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரலாமே?’

(“எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்” தொடர்ந்து வாசிக்க…)