(By: Dr Ziyad Aia)
பாராளுமன்ற தெரிவுக்குளு August மாதம் சமர்ப்பித்த அறிக்கையின்படி (Dated 21st, July 2023)
2021 பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டில்
26.2% கலைப்பிரிவுக்கும்
18.2% வணிகம்
மற்றும் இதர துறைகளுக்கான (படத்தை பார்க்க) இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Category: சமூக விழிப்பு
Social Awakening
சி.சுப்ரமணியம் என்பது முழுப் பெயர்
(By Kavitha Bharathy )

திரைப்படக் கலைஞர் ராஜேஷ்
என் நெருங்கிய நண்பர்.
இதுவரை ஊடக வெளிச்சத்துக்கு வராத சுவாரசியமான தமிழ்நாட்டு ஆளுமை யாரேனும் இருந்தால் அவரைப் பற்றிய ஒரு கட்டுரை வேண்டும் என்று ஒரு பிரபல வார இதழ் ராஜேஷிடம் கேட்டு இருந்தது…
” உங்ளுக்கு அது போன்ற யாரையேனும் தெரிந்தால் சொல்லுங்கள் பாரதி. போய் பார்க்கலாம்” என்றார் ராஜேஷ்.
தன்னுயிரை மாய்த்துக்கொள்ளுதல் பிரச்சினைக்குத் தீர்வாகாது
காலாவதியான (காலம்) கஞ்சி .
காரல் மார்க்ஸ்
கண்டன அறிக்கை
மலக்குழி வக்கிரங்கள்
வீட்டுத்தோட்டத் திட்டத்தால் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள முடியுமா?
(எம்.எஸ்.எம். ஐயூப்)
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கையில் மிக விரைவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படப் போவதாக, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பலர் கூறுகிறார்கள். கடந்த வருடம், இரசாயன பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையின் காரணமாக, உள்நாட்டு உணவு உற்பத்தி வெகுவாகப் பாதித்தமையும் நாடு எதிர்நோக்கியிருக்கும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையின் காரணமாக உணவு இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதுமே, இந்த அச்சத்துக்கு காரணங்களாகும்.
தமிழ் இலக்கியங்களில் முற்போக்கு
பின்னென்ன உயர்குல வேளாளன்!
எலும்பை ஊடறுத்து
தீண்டும்
ஊசிக்குளிர்
வாழ்வின் மிடறறுத்து
உயிரைத் உயிரை துரத்தி
உறிஞ்சிக்குடிக்கும் வெஞ்சினம்
கொடுமைகளில் சிதைந்தது சுற்றும்
ஆன்மாவும் விறைக்கும்
கூதல் வெளியில்
தடுமாறிச் சுவாசிக்கும்
தட்டுக் கெட்டு மிஞ்சிய சுற்றம்
புல்லும் பூண்டும்
செடியும் கொடியும் பூவும்
நீயும் நானும் நம் மொழியும்
பிரளயத்தில் இல்லாது போய்விட்ட
மறுபொழுதின் அகால வேளையிலும்
உயிர் வாழ்வான்
‘உயர்குல’ வேளாளன்
யார் இந்த
‘உயர்குல வேளாளன்’?
வலி பொங்கும்
நெடும் பொழுதுகளில்
நீர்ப்பை உடைந்து கசிய
பொசுங்கிப் பெருகும்
குருதிப் பெருக்கில்
பிறப்பைத் தவிர்த்து
பன்னீரும் பாலும்
பாய்ந்தோடும் யோனி வழியாகவா
பிறப்பெய்தினான் – இந்த
‘உயர்குல வேளாளன்’
குப்பி விளக்கின் உச்சிப் புகை நிழல்,
சுவரில் நெளிந்து ஊர
மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் – அந்த
மந்தகாச இரவுகளில்
அம்மையப்பன்
கூடிக் கொண்டாடும்
கலவி தவிர்த்து
மாங்கனி உண்ணும்
மந்திரத்தில் பிறந்தவனா – இந்த
‘உயர்குல வேளாளன்’ ?
பள்ளரைப் போலும்
பறையரைப் போலும்
நாயைப் போலும்
அழுக்குண்ணும் புழுக்களைப் போலும்
முடிவெட்டும் என்னைப் போலும்
அழுக்ககற்றும் உன்னைப் போலும்
வெள்ளைப் பச்சை அரிசியில்
அவித்து உருட்டிய கட்டிக்காய்
உன்னதும் என்னதும் அல்லாத மொழியிலும்
முணுமுணுத்து மணியடிக்கும்
பிராமணரைப் போலும்
பிறப்படைந்தவன் தானே- இந்த
‘உயர்குல வேளாளன்’
பின்னென்ன ‘உயர்குல வேளாளன்’
களத்து மேட்டில்
கசிந்து வியர்வை
காய்ந்துபோக நான் விசிறி தந்தேன்
உழுத புஜத்தில்
வலி எழும் வேளையெல்லாம்
நீ களைப்பாற நான்
பதநீர் தந்தேன்
பதிலுக்கு நீ நெல்மணி தந்தாய்
எப்படி இடையில்
உயர்குல குலம் நீ ஆனாய்
எளிய சாதி நானானேன்?
ஒளி துப்பும் சூரியனும்
அடிவானில் விடிவெள்ளியும்
உதிக்காத இருண்ட காலங்களில்
மனுஸ்மிருதி சாஸ்திரம் – என்னை
மூத்திரம் கூட பெய்ய அனுமதித்ததில்லை
புறம் தள்ளி வாழ்தலும்
அடிமைகளுக்கு நீ
அரசனாவதும்
அடுப்படியிலும் படுக்கையிலும் மட்டுமே
உம் பெண்டிரை அனுமதிப்பதையும்
எப்படி நீ மனுநீதி என்றாய்?
என் குடிசைக் கூரைக்கு
கோரைப் புல்லும்
உன் வீட்டுக் கூரைக்கு
ஓலைக் கிடுகும் கட்டாயம் என்று
யார் இட்டது கட்டளை?
என் வீட்டுப் பெண்டிரை
மாராப்பு அணிய நீ
அன்றெல்லாம் அனுமதித்ததில்லை
இன்றும் உம் பெண்டிர்
படுக்கையின் சாளரம் தாண்டி
அப்பால் வீசும் தென்றல் சுகத்தை
சுவாசிக்க நீ விருமபுவதில்லைத் தானே ?
பெண்பிள்ளை சிரிப்பையும்
புகையிலை பருவத்தையும்
ஒப்பிட்டு பாழும் மொழி சொன்னது
இந்த உயர்குலம் தானே
உன் மொழியில்
வக்கிர புத்திக்கு
உயர்குலம் என்று பொருள்
நீ அறிந்ததுண்டா….
எங்கள் குடிசைத் தொகுதிக்குள் தான்
காதல் கல்யாணம்
முதன் முதலில் அனுமதிக்கப் பட்டது.
போன வாரப் பத்திரிகையில் கூட நீ
சிவந்த நிற (?)
இந்துமத (?)
அழகான (?)
குடும்பப்பாங்கான (?)
உயர்குல வெள்ளாளிச்சி தேடிக்கொண்டிருக்கிறாய்.
நூற்றாண்டுகள் பின்தங்கிய உன்
வக்கிர ஆசைக்குத்
தடுமாறும் பத்திரிகைத் தர்மம்
எண்ணம் முழுவதும்
இருள் நிறைய
பகலின் திசையில்
பெயர் மட்டும் போதுமா ?
நாகரிகம் அடைய வேண்டாமா?
அடுத்த நூற்றாண்டின் பெரும் சுவரை
முட்டி மோதி
இடித்துக் தகர்த்து விட்டு
நிமிர்ந்து நிற்கிறது எங்கள் உலகம்
ஆறுமுக நாவலரின்
ஐம்பாவச் சட்டத்துக்குள்
அடைபட்டுக் கிடக்கிறது
உங்கள் உலகம்
நஞ்சு கக்கும் கொடியவர்க்கும்
சூது விதைக்கும் பாதகர்க்கும்
எங்கள் மொழியில்
நாவலர் என்று பெயர் இல்லை
திண்ணப் பள்ளியில்
மண்கூட்டிய வாகைமர நிழல் மணலில்
ஒதுங்கி ஓரமாய் நான்
‘அ’ கூட எழுத நீ அனுமதித்ததில்லை
பனையேறும் பள்ளனுக்கு
பாராளுமன்றம் எதற்கென்று அன்று
சந்தத்துடன் சத்தமிட நீ
நாவலரிடம் தானே கற்றுக் கொண்டாய்
சாதி தாழ்ந்தவனுடன் சமபந்தி போஜனம்
பாவச் செயல் என்பதையும்
உருத்திராட்சைக் கொட்டை சுற்றிய
மண்டைக்குள் இருந்துதானே நீ
பரிமாறிக் கொண்டாய்
பழங்கதையெல்லாம்
இபபோதெதற்கு என்கிறாய்
புதுக்கதையும் நாறித்தானே கிடக்கிறது
கிடுகு வேலி பிய்த்து
எங்கள் பெண்கள் வெளிவந்து
ஆணுக்கு நிகராய்
நிமிர்ந்து நிற்க ஆரம்பித்து
நூற்றாண்டு ஆயிற்று….
ஆனாலும்…
உச்சாணி மாடியின் விளிம்பில் நின்று
தரை நோக்கிப் பாய்ந்து
உடலும் ஆன்மாவும்
சிதறிச் சாவது என் வீட்டுப் பெண்களல்ல….
ஆயிரம் பேரைச் சுமந்து
கனகதியில் பாயும்
தொடர் வண்டி முன் பாய்ந்து
உடலும் ஆன்மாவும்
சிதறிச் சாவது என் வீட்டுப்பெண்களல்ல
அப்புறப் படுத்திக் கொள்
உன் வீட்டுக்குப்பைகளையும்
ஆறாயிரம் ஆண்டுகால வழக்குகளையும்
நீ உயர்குல வேளாளன் என்பதுவும்
உனையண்டி உன் ஊரில்
ஆயிரம் தாழ்சாதி உள்ளன என்பதுவும்
பெண் உன் சொல்
மீறாள் என்பதுவும்
நீல நிறக் கண்களும்
வெண் சருமமும் கொண்டவர்களுக்கு
தெரிந்தாலும் கலையில்லை
உன்னில் வீசும் மணம்
அவன் மூக்கை அரிக்கும்
விதி வலியது வேளாளனே
சிணி மணம்
உன் மூளையின்
ஞாபக செல்களை சுரண்டுகிறது அல்லவா….
எம் துன்பியல் கவிதையின் இருதயம்
தினம் தினம் கண்ணீருடன்
எவர்க்காக உருகிச் சாகிறதோ
அவர்கள் உனக்காகவும்
வெடித்துக் கொள்வதுதான்
இன்னும் என் பெரிய சோகம்.
சக்கரவர்த்தி.