குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு வகை வைரசால் ஏற்பட கூடிய தொற்று நோய் ஆகும். ஆப்பிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுபற்றி ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை பாதிப்பு பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
ரணிலுக்கு ஆதரவளித்த ‘மொட்டுகளுக்கு’ சிக்கல்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்கள் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கிராமத்துக்கு தவறாமல் வரும் ஆபத்தான விலங்கு”
கண்டி, பதியபெலெல்ல நுகாய பிரதேசத்தில் சிறுத்தைப் புலியொன்று நடமாடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிராமத்தின் மேல் உள்ள காப்புக்காடு பகுதியில் இருந்து மாலை நேரத்தில் கிராமத்திற்கு வரம் பெரிய சிறுத்தைப் புலி கடந்த சில நாட்களாக வீடுகளில் வளர்க்கப்படும் நாய், மாடு போன்ற விலங்குகளை பிடித்து உண்பது வழக்கமாகிவிட்டது. மான் போன்ற விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் கிராம மக்கள் பார்த்துள்ளனர்.
மைத்திரியின் தூதை புறக்கணித்தார் ரணில்
34 வருடங்களின் பின் வழிபட அனுமதி
“ரூ.60 கோடி வாங்கினார் சாணக்கியன்”
மணிக்கு ஆயிரம் கி.மீ., வேகத்திலான சீன ரயில்
“ அனுர அல்லது சஜித் வெற்றி பெறுவார்கள் ”
இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம் இன்று
இந்தியாவின் 78ஆவது சுதந்திரமான இன்று, நாடு முழுவதும் சுதந்திர தின விழா, உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், புதுடெல்லி, செங்கோட்டையில் இன்று சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி புதுடெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தொடர்ந்து 11ஆம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார்.
