’மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதா? மக்களே உஷார்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும்  புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.  இன்புளூயன்சா -ஏ (Influenza A )வைரசின் துணை வகையான இந்த வைரஸ்` H3N2`என அழைக்கப்படுகிறது.

இலத்தீன் அமெரிக்காவில் அதிவலதுசாரி அலையின் புதிய கட்டம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 19: 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள், இலத்தீன் அமெரிக்கா பற்றிப் பேசுகின்ற போது முக்கியமானவையாகும். 

இத்திய மீனவர்: ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது

இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  திட்ட வட்டமாக தெரிவித்தார். வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் நேற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

ஏழு வெந்நீர் ஊற்றும் பறிபோகும் அபாயம்

இராவணன் தன் தாயின் இறுதி கிரிகைகளுக்காக தனது வாள் கொண்டு உருவாக்கியதாக இலக்கியங்களில் சொல்லப்படும் திருகோணமலை கன்னியா ஏழு வெந்நீர் ஊற்றும் பரிபோகும் அபாயத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றது.

தடையில்லா மின்சாரம் குறித்த தகவல்

தலா 60 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரியை ஏற்றிய மூன்று நிலக்கரிக் கப்பல்கள் புத்தளத்தை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 17,18 மற்றும் 19ஆவது கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சு தடையில்லா மின்சாரம் வழங்குவதை நிலக்கரி இறக்குமதி உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் ஸ்டார்ட்அப் பூடானுக்கு நன்மை பயக்கும்: அறிக்கை

பூட்டான்-இந்தியா ஸ்டார்ட்அப் உச்சிமாநாட்டின் மூலம் அனுபவம் வாய்ந்த வணிகர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு வளரும் தொழில்முனைவோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் இந்தியாவின் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு பூட்டானுக்கு நன்மை பயக்கும் என்று தி பூட்டான் லைவ் தெரிவித்துள்ளது.

ரூபாய் ஏன் திடீரென மேலே பாய்ந்தது?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இது ஆச்சரியம் தான்! ஆனால் உண்மை. நாடு சாதாரண நிலையில் இருந்த கடந்த பல தசாப்தங்களாக, ஐக்கிய அமெரிக்க டொலரோடு ஒப்பீட்டளவில் இலங்கையின் ரூபாயின் பெறுமதி குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால், இலங்கை வங்குரோத்து அடைந்ததாக நாட்டின் தலைவர்களே அறிவித்ததன் பின்னர், ரூபாயின் பெறுமதி கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக அதிகரித்தது.

பொருளாதாரம் 7.8% ஆல் சுருங்கியது

இலங்கையின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதத்தால் சுருங்கியுள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்

அரச துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மார்ச் 20 ஆம் திகதி முதல் மட்டுப்படுத்த அரசாங்கம் தீ்ர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்கிறது

இலங்கை மத்திய வங்கியினால் வியாழக்கிழமை (16) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329 ரூபாய் 02 சதமாகவும் விற்பனை விலை 346ரூபாய் 33 சதமாகவும் பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327 ரூபாய் 59 சதமாகவும் விற்பனை விலை 344ரூபாய் 66 சதமாகவும் புதன்கிழமை (15) பதிவாகி இருந்தது. மார்ச் 1ஆம் திகதிமுதல் அதிகரித்து வந்த ரூபாயின் பெறுமதி மார்ச் 10ஆம் திகதி முதல் குறைந்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.