அமெரிகாவின் மீது ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

பங்களாதேசில் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டினார். பங்களாதேசின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கொண்ட சிக்கலால், கடந்த 5ஆம் திகதி தன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு,  அந்நாட்டு பாராளுமன்றத்தை ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார்.

மொட்டு கருகிறது

ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் களத்தில் பல்வேறு தாவல்களையும், தீர்மானங்களையும், கட்டுப்பணம் செலுத்தல்களையும், அறிவிப்புகளையும் நாளாந்தம் அறிந்து கொள்ள முடிகின்றது. 

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் அனுர

ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் செவ்வாய்க்கிழமை (12) கையொப்பமிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தோழர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவை உள்ளிட்ட தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சினிமாஸ் குணரத்தினம்

(ராதா மனோகர்)

சினிமாஸ் குணரத்தினம் ஏன் சுட்டு கொல்லப்பட்டார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? யார் குற்றவாளிகள்?இலங்கை திரையுலகின் பிதா மகன் என்றழைக்கப்பட்ட திரு கனகசபை குணரத்தினம் 20 July 1917 – 27 August 1989) அவர்களின் வரலாறு இலங்கை மக்களால் ஏன் போதியளவு நினைவு கூறப்படுவதில்லை?

மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் காலமானார்

மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா தனது 80ஆவது வயதில் காலமானார். மேற்கு வங்கத்தின் 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியின் கடைசி முதலமைச்சரான புத்ததேவ் பட்டாச்சார்யா, 2000-2011 வரை மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருந்தார்.

“ஒரு சிவில் யுத்தம் – தவிர்க்கப்பட முடியாதது”

(ச.சேகர்)

மேலே உள்ள தலைப்பு, உலகப் புகழ்பெற்ற வர்த்தகரும், புத்தாக்கவியலாளருமான எலொன் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவாகும். ஐக்கிய இராஜ்ஜியத்தில் கடந்த வாரமாக பதிவாகி வரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் இந்த பதிவை அவர் இட்டுள்ளார். சரி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்,

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக

(Comrade Baskaran)

அன்பு தோழரே,

வணக்கங்களும் வாழ்த்துக்களும். அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் சார்பாக நாளை-06-07-2024- மாலை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டம் தங்கள் ஏற்பாட்டில் நடக்க இருப்பதாக ஒரு வாட்ஸ் அப் குழுவின் செய்தி மூலம் அறிந்தேன்.

மற்றுமொரு படியெடுப்பாக தமிழ்த் தேசியப் பேரவை

 (லக்ஸ்மன்)

ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் சிவில் அமைப்புகளினால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்காகச் செயற்படுவதற்கான அமைப்பினை ஏற்படுத்திக்கொள்வதில் கடந்த மாதத்தில் மக்கள் அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பொதுச் சபை மீண்டும் ஒரு பெயர் மாற்றத்திற்கு உட்பட்டு தமிழ்த் தேசியப் பேரவையாக இறுதிப் படியாக அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மாற்றம் ஏற்படாமலிருக்கும் என்று சொல்ல முடியாது.

தீவக மக்களின் போராட்டங்களின் பயணம்

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

யாழ்ப்பாணம், எழுவைதீவில் உள்ள இரண்டு பாடசாலைகளில் ஒன்றைச் சேர்ந்த ஆசிரியையான ஜெயலக்ஷ்மி (26) தினமும் காலையில் ஊர்காவற்துறையில் இருந்து எழுவைதீவு வரையிலான கடற்பரப்பினை நோக்கி சவால்கள் நிறைந்த பயணத்தைத் தொடங்குகின்றார்.

“ரணில் செய்தது மிகப்பெரிய தவறு” பஷில் அதிரடி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளமை முற்றிலும் தவறானது என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.