“எங்கே போவது, எங்கே தேடுவது?”: அவலக் குரல்கள்

கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளால் கேரள மாநிலம் வயநாட்டில் இதுவரை 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சம்பவ இடங்களில் காணக் கிடைக்கும் காட்சிகள் மனதைப் பிழிவதாக உள்ளன.

மன்னாரில் இளம் தாய் பரிதாபமாக மரணம் – வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம்  பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.   மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த  மரியராஜ் சிந்துஜா வயது (27)  என தெரிய வந்துள்ளது. 

வயநாடு நிலச்சரிவு: பலி 50 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த வயநாட்டில், நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு நிலச்சரிவுகளில் சிக்கி, 20 பேர் பலியாகிய நிலையில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மீண்டும் வெனிசுலாவின் ஜனாதிபதியானார் நிக்கோலஸ் மதுரோ

வெனிசூலாவின் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தாலேயே, இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதாரத்தை உயர்த்தும் பயிற்சி

புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட சங்கமன் கிராமத்தில் பணம் பொருள் கைப்பணி உற்பத்திகள் மூலம் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் பேரவைக்கான இயக்கத்தின்  ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்படுவார். கொழும்பு, பொது நூலகத்தில், திங்கட்கிழமை (29) நடத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, லஹிரு வீரசேகர இந்த அறிவிப்பை விடுத்தார்.

ரணிலை கைவிட்டது மொட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சின்னத்தின் கீழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்க இன்று தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இதன்படி, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது எனவும் அவர் கூறினார்.

பீஜிங்க். மண் சரிவில் 11 பேர் பலி

சீனாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும், கேமி புயலால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஹ{ஹான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் கடும் வெப்ப அலையால் வெளியே வர தடை

ஈரானில் கடுமையான வெப்ப அலை காரணமாக அரசு அலுவலகங்கள், வங்கிகளை மூட உத்தரவிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மாலை 5 மணி வரை வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

த.மு. கூ போராட்டத்தால் முடங்கியது ஹட்டன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1700 ரூபா உடன் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் ஞாயிற்றுக்கிழமை (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.