யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் வியாழக்கிழமை (31) அன்று பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது 

கிழக்கு மாகாணத்தை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள்

கிழக்கு மாகாணத்தை வலுப்படுத்துவது னூடாக சாத்தியமான பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்  தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனெத்தி  தலைமையில் பங்குபற்றுதலுடன் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை(30)  அன்று இடம் பெற்றது.

இனியபாரதி கையாண்ட புதைக்குழியை தோண்டும் சி​ஐடி

இனிய பாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்த்திபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடஆகியோர் படுகொலை செய்யப்பட்டு  புதைக்கப்பட்ட இருப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில்  தோண்டும் நடவடிக்கை ஒன்றை வியாழக்கிழமை (31) சிஐடியினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

மட்டு சட்டவிரோத மண் கடத்தல்;ஒருவர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான  வீதியில்  பொலிஸார் மேற்கொண்ட  திடீர் சோதனையின் போது சட்டவிரோதமான முறையில் அனுமதிப் பத்திரத்தை மீறி மணல் ஏற்றி வந்த  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாநாயக்க தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைக் குறைப்பு;வர்த்தமானி வெளியீடு

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைச் சட்டத்தைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்ட வரைவு சட்டமூலத்தின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஊழல் விசாரணைகள் குறித்து ஜனாதிபதி விசேட தகவல்

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். 

வடமராட்சி தந்த முதலாவது இடதுசாரித்தலைவர் தோழர் செ. தர்மகுலசிங்கம்( ஜெயம்)

(Murugesu Anatharadsagan)

வடமராட்சி புலோலியில் 1910ஆம்ஆண்டு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த தோழர் தர்மகுலசிங்கம் தனது கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் கற்று பின்னர் சட்டம் பயின்று, சட்டத்தரணியாக விளங்கியவர்.

“ஒத்துக்கொண்டனர் ஓட்டுகின்றோம்” – ரயில் ஓட்டுநர்கள்

பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (29) நள்ளிரவு தொடங்கவிருந்த 48 மணி நேர ரயில் ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

‘ரத்தரங்’ மகள் கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான ஜீப் பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட வாகனம்  சம்பவம் தொடர்பாக கைது செய்யத் தேடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபய குணவர்தனவின் மகள்,  பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் புதன்கிழமை (30 )ஒரு வழக்கறிஞர் மூலமாக சரணடைந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பூர் மனித எலும்பு எச்சங்கள்: 6 ஆம் திகதி விசேட கூட்டம்

சம்பூர் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 6 ந் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்று மூதூர் நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (30) தீர்மானித்துள்ளது.