‘புரெவி புயல்’ இலங்கையின் கிழக்கு கரையை இன்றிரவு 7 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்ப்பதாக, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியிருந்தது. எனினும், ‘புரெவி’ புயல், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் திருகோமலைக்கு கிழக்கு-தென்கிழகில் 140 கிலோமீற்றில் நிலைகொண்டுள்ளது என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. ஆகையால், பிற்பகல் 11.30 மணியளவிலேயே அவ்விடத்தில் நிலைகொண்டிருந்தது என அந்நிலையம் அறிவித்துள்ளது.
யாழ். மாநகர சபையின் பட்ஜெட் தோல்வி
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் விசேட அமர்வு, மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று (02) நடைபெற்றது. இதன்போது, நிதியறிக்கை்கான வாக்கெடுப்பின் போது, ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன நிதியறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.
மரணங்களை நினைவுகூரல்: அரசியலும் அபத்தமும்
சிறைச்சாலைகளில் 1,091 பேருக்கு கொரோனா
சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,091 ஆக அதிகரித்துள்ளதென, சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 183 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ளனரென, சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கிழக்கில் கொரோனா; மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
தோழர்களை நினைவுகூர்வோம். …….

தோழர் நடேசலிங்கம் EPRLF இல் களப்பலியான முதலாவது தியாகி.தோழர் நடேசலிங்கம் அவர்கள் EPRLF இன் அமைப்பாளர்களில் ஒருவர். 1981 அக்டோபர் 4ம் திகதி முதல் 11 ம் திகதி வரரை தமிழ்நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர் மகாநாட்டில் தோழர் நடேசலிங்கம் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். “தாடிக் கிழவனின் பாதையில் தாகம் எடுத்து நடப்பேன்” என கவிதை எழுதிய தோழர் நடேசலிங்கதின் வாழ்க்கையின் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டகலாது .
மாதவிடாய் வரியும் ’ சம்மட்டியை ’ கையிலேந்தி நிற்கும் சிலையும்
கார்த்திகை பூவே

(சுகன்)
போர்க்களத்தைத்தவிர வேறெதற்கும் இந்த நஞ்சுச் செடி நினைவுகூரப்படுவதில்லை. போரிற்குச் செல்லுமுன் செங்காந்தள் மாலையை அணிந்து செல்வதாய ஒரு சித்திரம் புறநானூறில் உண்டு.பெண்களின் கைவிரல்களுக்கு அழகின் உவமானமாகக் கொள்வது இப்பூவின் உருவம்.
கௌரவர்களுடன் யுத்தம் என முடிவெடுத்தபின் திரோபதி இந்த மலரைத் தலையிற் சூடி அதை உறுதிப்படுத்தினாரென பாரத உபகதை உண்டு.Gloriosa superba என தாவர வகைப்பாட்டில் அடையாளப்படுத்தப்படும் இச்செடியருகே பாம்புகள் படுத்திருக்குமெனவும் பார்த்தால் கண்வருத்தம் வருமெனவும் வேலியோரங்களில் தானே வளரும் இதை வெட்டி அழித்துவிடுவார்கள்.
இதைக் குறியீடாகக் கொள்ளும் இனக்குழுக்கள் அழிந்துபோவர்கள் என ஐதீகம்.அழகைக் காட்டினாலும் ஆரும் இம்மலரை அண்டுவதில்லை.தமிழ்நாட்டுத் தமிழுணர்வாளர் ஒருவர் பிரபாகரனுக்குப் பரிந்துரை செய்தது இது.
தமிழ்நாட்டினதும் சிம்பாப்வேயினதும் தேசிய மலரிது. துக்கத்தின் குறியீடாகக்கூடக் கொள்ளப்படாத இப்பூவையும் செடியையும் ஆடு- மாடு மற்றும் தாவர பட்சணிகள் எதுவும் உணவாகக் கொள்வதில்லை.
பூவே செம்பூவே ..என பாடும் பாடல்களிலும் இதற்கு இடமில்லை,வாசமில்லா மலரிது…மல்லிகைப்பூவே ..மல்லிகைப்பூவே பார்த்தாயா..செந்தூரப்பூவே ..செந்தூரப்பூவே..முல்லை மலர்மேலே மொய்க்கும் வண்டுபோலே..தாமரை பூத்த தடாகமடி…இப்படியாக வாழ்வோடிணைந்துவரும் பூக்களின் வழியிலும் இதற்கு இடமில்லை.கோவில்களின் சிற்பங்களிலும் இல்லை.பூசைக்கேற்ற பூவிது..எனக் கொண்டோருமில்லை.தண்மையும் குளிர்மையுமற்ற இப்பூ நெருப்பின் தீச்சுவாலை வடிவமாக அனல் மேலெழும் உற்பவமாகப் பார்க்கப்படுவதுமுண்டு “கார்த்திகைப்பூக் காதலர்கள் ” ஆழ்ந்த இரக்கத்திற்குரியவர்கள்.
கார்த்திகைக் கோலம்
(George RC)
கார்த்திகை மாதம் வந்தால்பூ படம் போட்டுஓவரா சீன் போடும்கார்த்திகைப் பூ காதலர்களே!நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டுநீங்கள் வைக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஒப்பாரிகளையும்நீலிக் கண்ணீர், முதலைக் கண்ணீர்,ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கண்ணீர் எல்லாவற்றையும்பார்த்தால்…உண்மையில் தங்கள் பிள்ளைகளை, தந்தையரை, துணைவரை போராளிகளாக இழந்தவர்கள் கூடஇப்படி கூத்துக் காட்ட மாட்டார்கள்.அவர்கள் மெளனமாக அழுது விட்டுப் போவார்கள்.”’