கியூபாவைத் தாக்கிய ஈட்டா புயல்

வலுவடைந்து வருகின்ற பருவகால மழைப் புயலான ஈட்டாவானது நேற்று கியூபாவைத் தாக்கியதுடன், ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவின் முனையை நோக்கி நகருகிறது. இப்புயலால் பலர் உயிரிழந்ததுடன், மெக்ஸிக்கோ மற்றும் மத்திய அமெரிக்காவை கடந்த வாரம் பெரும் சூறாவளியாகத் தாக்கிய நிலையில் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

‘கொவிட்-19 தடுப்புமருந்து 90% பயனுள்ளது’

பைஸர் நிறுவனத்தின் சோதனை கொவிட்-19 தடுப்புமருந்தானது ஆரம்பகட்ட முடிவுகளின்படி 90 சதவீதத்துக்கும் அதிகமான பயனுள்ளதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

பைடனை இதுவரையில் வாழ்த்தாத ரஷ்யா, சீனா

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனை, ரஷ்யா, சீனா, பிரேஸில், வடகொரியா, துருக்கி, மெக்ஸிக்கோ உள்ளிட்டவை இன்னும் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘கோட்டாவுடன் சீன ஜனாதிபதி உரையாடவில்லை’

வார இறுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஸும் செயலி மூலம் உரையாடினார் என, இலங்கை ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திக்கு, சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. Zoom செயலியூடாக, இலங்கை ஜனாதிபதியுடன் சீன ஜனாதிபதி, உரையாடியிருந்தார் என, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அம்பிளாந்துறை படகுப்பாதை நீரில் மூழ்கியது

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்கும் இடையிலான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாகக் காணப்படும் அம்பிளாந்துறை இயந்திரப் படகுப்பாதை, நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

‘20சதவீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி’

நமது நாட்டின் சனத்தொகையில் 20வீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க உலக சுகாதார ​அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குழுவொன்றை நியமித்துள்ளார்.

நீண்ட காலத்தின் பின்னர் வெற்றிக்கனியைச் சுவைத்த பைடன்

ஐக்கிய அமெரிக்காவின் செனட்டராக, உப ஜனாதிபதியாக ஐ. அமெரிக்க அரசியலில் அரை நூற்றாண்டு காலமாக இருக்கும் ஜோ பைடன், ஜனாதிபதியாகும் முன்னைய இரண்டு தோல்வியில் முடிவடைந்த சந்தர்ப்பங்களைத் தாண்டி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தோற்கடித்து ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது 5 வயது மகன் பிரகால்த் விளையாடிக் கொண்டிருந்த போது கடந்த 4ஆம் திகதி அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

விபரீதங்களோடு விளையாடும் விந்தை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது அல்ல; ஆனால், ‘முன்னே ஓடவிட்டுப் பின்னே துரத்தும்’ வித்தையை, இந்தப் பெருந்தொற்றை வைத்து, அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.