கூவல்!

(எஸ். ஹமீத்)
குயில் கூவுகிறது…
அகம் மகிழ்கிறது!
குழந்தை கூவுகிறது…
அரவணைப்பு கிடைக்கிறது!
வியாபாரி கூவுகிறான்…
விற்பனை நடக்கிறது!
அரசியல்வாதி கூவுகிறான்…
வாக்குகள் சேர்கிறது!
சேவல் கூவுகிறது…
காலை புலர்கிறது!
சிரியா கூவுகிறது…
மரணங்களே மறுமொழியாகிறது!

ஆயிரக் கணக்கில் பெண்களைக் கடத்தி விற்று கோடீஸ்வரர்களான தம்பதியர்! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

(எஸ். ஹமீத்)

கடந்த பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ நாலாயிரம் பெண்களைக் கடத்தி காமுகர்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் சுமார் ரூ.250 கோடி ரூபா பணம் சம்பாதித்த கணவனையும் மனைவியையும் டில்லி உளவுத்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வங்கதேசம் வழியாக வெளிநாடுகளுக்குப் பெண்கள் இரகசியமாகக் கடத்தப்பட்ட அநியாயம் பற்றிய தகவல் டில்லி உளவுத்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் மூலம் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்தான் மிக அதிகளவில் கடத்தப்பட்டிருப்பதை உளவுத்துறையினர் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, கடத்தல் கோஷ்டியைப் பிடிக்க நாடெங்கும் வலை விரித்துத் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

(“ஆயிரக் கணக்கில் பெண்களைக் கடத்தி விற்று கோடீஸ்வரர்களான தம்பதியர்! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!!” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாப்புலவில் படையினர் குவிப்பு

கேப்பாப்புலவு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில், அதிகளவான பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் போராட்டம் இடம்பெற்ற பகுதியில், நேற்று (05) குவிக்கப்பட்டிருந்தனர். முல்லைத்தீவு, கேப்பாபுலவு மற்றும் சூரியபுரத்தைச்சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு படை முகாமுக்கு முன்னால், தொடர் போராட்டத்தை புதன்கிழமை (01) முதல் முன்னெடுத்துவரும் நிலையில், போராட்டம் 5 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (05) தொடர்ந்தது.

(“கேப்பாப்புலவில் படையினர் குவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மாகாண சபை தேர்தல் முந்தும்?

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு முன்னதாக, மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்துவருதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை நடத்தினால், அது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கே வாய்ப்பாக அமையும். அவ்வாறு அமைவதை தடுக்கும் நோக்கிலேயே, சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரேநாளில் நடத்துமாறு, அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(“மாகாண சபை தேர்தல் முந்தும்?” தொடர்ந்து வாசிக்க…)

ஆண்களாகப் பிறந்து பெண்களாக வாழ்ந்தோர் சவூதிச் சிறையில் அடித்துக் கொலை!

(எஸ். ஹமீத்.)

பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் அம்னா ,வயது 35 . மீனோ, வயது 26 . இவ்விருவரும் சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் பார்த்திருக்க, கோணிச் சாக்குகளில் கட்டப்பட்டு, தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு, இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

(“ஆண்களாகப் பிறந்து பெண்களாக வாழ்ந்தோர் சவூதிச் சிறையில் அடித்துக் கொலை!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சிறீதரன்

தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறீதரனுக்கு இப்ப ஒரு நோய் பிடித்திருக்கு. எந்த விழாவிலும் தானே முன்னுக்கு நிற்க வேண்டும் என்று. இதனால் தமிழ் மக்களுக்கு எதும் தீங்கு நடக்குமா என்று அவர் யோசிப்பதில்லை. கவலைப்படுவதும் இல்லை. மாவீரர் நிகழ்வு என்றால் தானே தீபம் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பார். கோயில் விழா என்றால் தனக்கு பரிவட்டம் கட்ட வேண்டும் என்பார்.
ஆமி தளபதிக்கு விழா எடுத்தாலும் அதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. தளபதிக்கு பரிவட்டம் கட்டி கௌரவித்தாலும் அதையிட்டு அவருக்கு கவலை இல்லை.

(“தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சிறீதரன்” தொடர்ந்து வாசிக்க…)

வாழும் கியூபா தலைவர் பிடல் காஸ்ரோ

உலகின் இயற்கை விவசாயத்தில் முக்கிய இடம் வகிக்கும் நாடு கியூபா மட்டுமே, இரசாயன உணவுகளையும் தனது வாழ்நாளில் வாழ்ந்த காலத்தைவிட அதிக காலம் குளிர்சாதன பெட்டிக்குள் இருக்கும் உணவு பதார்த்தங்களை உண்ணும் இந்த நவீன உலகில் அதிக இயற்கை உற்பத்திகள் உள்ள ஒரு நாடு என்ற ஒரு பெருமையை கியூபா கொண்டுள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்துடன்  ஆட்சி செய்த புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா வின் ஆட்சியில் (1959) அதிக ரசாயன உரங்கள் காரணமாக அழிந்து வந்த விவசாய நிலத்தை இயற்கையின் உர வகைகளை பயன்படுத்தி உலகின் இயற்கை உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் நாடாக ஆக்கி விட்டு போயிருக்கிறார்.

(“வாழும் கியூபா தலைவர் பிடல் காஸ்ரோ” தொடர்ந்து வாசிக்க…)

சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக அரசியல் அரங்கில் கலகக்காரர்களுக்கு தனியான இடமுண்டு. கலகக்காரர்கள் எல்லோரும் ஓரே இயல்புடையவர்கள் அல்லர். அவர்கள் வாழ்ந்த காலம், இடம், உலகச் சூழல் என்பனவும் அவர்களின் நடத்தையுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. கலகக்காரர்களே உலக அரசியல் அரங்கை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்லவியலும். அவர்கள் இல்லாவிடின் ஒற்றைப் பரிமாண உலக அரசியலை சத்தமின்றி ஏற்று நடக்கும் இயல்புடனேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உலகம் இப்போது அவ்வாறு இயங்குவதில்லை. அவ்வாறு இயங்குவதையே அதிகார மையங்கள் விரும்புகின்ற போதும் அது சாத்தியமாவதில்லை.

(“சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்” தொடர்ந்து வாசிக்க…)

வெளிவந்துவிட்டது வானவில் 74….: புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது!

மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில்
அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறது என அரசியலமைப்புச் சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும்
நாட்டின் சுதந்திரம் என்பனவற்றுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு
மாகாண சபையையும் கலைப்பதற்கோ அல்லது அதனது அதிகாரங்களை மீளப் பெறுவதற்கோ மத்திய அரசுக்கு அதிகாரம்
அளிக்கும் யோசனையொன்றை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். (தொடர்ந்து வாசிக்க….)

தொழில்சாலைகளை திருப்பி அனுப்பி வடமாகாண சபையின் சாதனை!

வடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை. என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.

(“தொழில்சாலைகளை திருப்பி அனுப்பி வடமாகாண சபையின் சாதனை!” தொடர்ந்து வாசிக்க…)