ஜெனீவாவில் என்ன கிடைக்கப் போகிறது?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

திங்கட்கிழமை (22) ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பில் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்க, சில நாடுகள் தயாராகி வருகின்றன. இந்த நாடுகளுடன், இணக்கப் பிரேரணை ஒன்றை (consensual resolution) முன்வைக்க முயற்சிப்பதாக, வெளியுறவுச் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகே, ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு அண்மையில் தெரிவித்து இருந்தார்.

யாழ். சந்திப்புகளும் புதிய தமிழ்ப் பேரவையும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

பதவி, பகட்டை அடைவதற்கான வழியாக, அரசியலைத் தெரிவு செய்தவர்கள், அவற்றை அடையும் வரையில், சும்மா இருப்பதில்லை. அதுவும் ஏற்கெனவே பதவி, பகட்டோடு இருந்தவர்களால், அவையின்றி சிறிது காலம் கூட இருக்க முடியாது.எப்படியாவது, குட்டையைக் குழப்பி, மீன் பிடித்துவிட வேண்டும் என்கிற நினைப்பிலேயே அலைந்து கொண்டிருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அரங்கேறும் காட்சிகளைக் காணும் போது, அதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது.

இலங்கை: கொரனா நிலவரம்

கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(24) 458 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்படி தொற்றாளர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொழும்பு மாவட்டத்தில் 100 க்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த தினங்களில் 100 க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

’வடக்கின் சுற்றுலாத்துறை முன்னேற்றப்படும்’

எதிர்வரும் காலத்தில், வடக்கு மாகாணத்தில், சுற்றுலாத்துறை சார்ந்த வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, வடக்கு மாகாண சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்தியாவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சஹ்ரானின் முதலாவது இலக்கு தப்பியது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் ஆவார். அவருடைய முதலாவது திட்டம் தவறிவிட்டது என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிவிக்கையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டம் நான்கு வருட நிறைவை எட்டியது

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது.

நாட்டை வந்தடைந்தார் இம்ரான் கான்

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்றும் சில மணிநேரத்துக்குள் இலங்கையை வந்தடையவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது அரச தலைவர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவார்.

இலங்கை: கொரனா நிலவரம்

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 732 பேர் இன்று(23) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 75,842 ஆக அதிகரித்துள்ளது.

இந்நாள் மேயரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் முன்னாள் மேயர்

அரசியல் நோக்கம் கொண்ட ஆதாரமற்று குற்றச்சாட்டுகளை, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் சாட்டுகிறாரென, முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு இணங்கியதன்