கிழக்கு தேசத்தின் சுயநிர்ணயம் அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்!

ரி. தர்மேந்திரன் –

கிழக்கு தேசம் என்கிற கோட்பாட்டின் ஸ்தாபகரான வஃபா பாருக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளர் ஆவர். தமிழீழ தாயகம் போல, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போல, ஒரு நாடு இரு தேசம் போல வஃபா பாருக் கிழக்கு தேசம் என்கிற சிந்தனை கருவை முன்வைத்து கடந்த ஒரு வருடமாக முன்னெடுத்து வருகின்றார். முஸ்லிம்களின் சம கால அரசியல் குறித்து நாம் இவரை பேட்டி கண்டபோது….

(“கிழக்கு தேசத்தின் சுயநிர்ணயம் அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

தேசிய காங்கிரஸ் வன்னி பிரகடனத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்!

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா அடுத்ததாக வன்னி பிரகடனத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று இக்கட்சியின் மகளிர் அணி தலைவியும், வட மாகாண பொறுப்பாளருமான ஜான்சிராணி சலீம் கோரி உள்ளார். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாலமுனை பிரகடன மாநாட்டை நடத்தி 05 தீர்மானங்களை நிறைவேற்றியது. இதில் வட மாகாணத்தில் இருந்து வந்து ஜான்சிராணி சலீம் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“தேசிய காங்கிரஸ் வன்னி பிரகடனத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.தே.கவை கைவிட்டது சு.க

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடபோவதில்யென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில், நேற்று இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

தாழங்குடா படை முகாம் அகற்றப்பட்டது

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழங்குடாவில் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் அகற்றப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு, கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தாழங்குடாவில் தனியார் காணியொன்றில் இந்தப் படைமுகாம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நல்லாட்சியின் கீழ், தனியார் காணிகளில் உள்ள படை முகாம்கள் அகற்றப்படவேண்டுமென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அமைவாக, இந்தக் காணி விடுவிக்கப்பட்டது. இதன்கீழ், கடந்த 10 வருடத்துக்கும் மேலாக தாழங்குடாவில் தனியார் காணியில் இருந்த இப்படைமுகாம் அகற்றப்பட்டு, அந்த காணிகள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் புரட்சியும் பெர்லின் சுவரும்

(தோழர் சுகு)

யார் சொன்னது அக்டோபர் புரட்சியின் அறங்கள் தோற்றதென்று ! அது காட்டாற்று வெள்ளம்!!;

நாம் வாழும் காலத்து பதிய தலைமுறைக்கு அகடோபர் புரட்சி பற்றிய அறிவு பிரக்ஞை இல்லை என்றே கூறிவிடலாம்.

1990 பெரும் பிரளயம் போல் உருவான நுகர்வுக்கலாச்சாரம் மற்றும் தாராளவாத பொருளாதாரமுறையில் அடிபட்டுச் செல்லும் தலைமுறை இது.

பொதுவாகவே சுதந்திரப்போராட்டம் ,சமூகமாற்றம் பற்றிய கருத்துக்கள் பலவீனப்படுத்தப்பட்ட நகர்ப்புற இளைஞர் குழாம் ஒன்று உருவாகியுள்ளது.

(“அக்டோபர் புரட்சியும் பெர்லின் சுவரும்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திருந்திவிட்டார்களா? அல்லது திருந்தினமாதிரி …… ?

1. திருப்பித் திருப்பி அதிகாரத்தொனியிலேயே அறிக்கைகள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எப்போது சமூகத்திற்கு முன் மாதிரியாக நடந்தார்கள் அவர்கள் கூப்பிட்டதும் கூட்டத்திற்கு வருவதற்கு. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் பெண்களின் நிலை என்ன? பகிடிவதை என்ற பெயரில் பல்கலைக்கழக மாணவர்கள் கேவலமான வன்முறையில் ஈடுபடுவது ஏன்? இதுவரை தமிழ் சமூகத்தை பாதிக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எத்தனை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுக்கு வெள்ளையடிப்பதற்கு அரசியல் கைதிகள் பிரச்சினையை கையிலெடுக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது?

(“யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திருந்திவிட்டார்களா? அல்லது திருந்தினமாதிரி …… ?” தொடர்ந்து வாசிக்க…)

திருத்தப்பட வேண்டிய தவறுகள்

(எஸ்.கருணாகரன்)

இலங்கைத் தீவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களில் கூடுதலானவர்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களே என்று சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே கடுமையான வறுமைச் சூழலுக்குள் சிக்கியுள்ளன. அதிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 18.2 சதவீதமான மக்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய இது ஓர் அபாய அறிவிப்பே.

(“திருத்தப்பட வேண்டிய தவறுகள்” தொடர்ந்து வாசிக்க…)

குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல்

(கே. சஞ்சயன்)

புதிய கட்சிகளின் உருவாக்கம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள், ஏட்டிக்குப் போட்டியான விமர்சனங்கள், எதிர்கால முதலமைச்சர் யார் என்ற அனுமானங்கள் போன்றவை, வடக்கின் அரசியல் களத்தை மீண்டும் சுவாரசியப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே கொள்கை, கோட்பாடுகளுக்கு அப்பால், எல்லாக் கட்சிகளும், அதற்குத் தயாராக வேண்டிய நிலையில் உள்ளன.

(“குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

தலைகீழாய் தொங்கவிடப்பட்டான் முசோலினி!

ஆட்சிக்கு வந்த முசோலினி ‘இத்தாலியின் முன்னேற்றத்திற்காக நான் பல தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறேன். இதை எதிர்ப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களை அழித்துவிடுவேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தான். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் தடைசெய்தான். பத்திரிகை சுதந்திரத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கினான். தன்னை எதிர்ப்பவர்களை நாடு கடத்தினான். தன் எதிரிகள் என்று அடையாளம் கண்ட அனைவரின் தலைகளையும் துண்டிக்கும்படி உத்தரவு பிறப்பித்தான்.

(“தலைகீழாய் தொங்கவிடப்பட்டான் முசோலினி!” தொடர்ந்து வாசிக்க…)

சாய்ந்தமருது – கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி

(மொஹமட் பாதுஷா)

தனித்துவ அடையாளம் என்றும் அபிவிருத்தியோடு சேர்ந்த உரிமை அரசியல் என்றும் பல வருடங்களாகப் பேசி வருகின்ற முஸ்லிம்களின் அரசியல் இயலாமை, கிழக்கில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கின்றது. வரலாற்றில் இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், அரசியலில் இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை என்பதையும், மக்களை உசுப்பேற்றி விடுவதில் கைதேர்ந்த அளவுக்கு காரியம் முடித்துக் காட்டுவதில் அவர்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதையும், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் வெளிக்காட்டியிருக்கின்றது. (“சாய்ந்தமருது – கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி” தொடர்ந்து வாசிக்க…)