வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தைச் சேர்ந்த கச்சத்தீவில் உள்ள கடற்படைப் பிரிவினால், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணிக்கும் டிங்கி படகை அவதானித்தது, வடக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த ஒரு கடற்படைக் கப்பல் நடத்திய இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த டிங்கி படகின் ஊடாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பறவைகளே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 41 வயதுக்குட்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பறவைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.