இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இயந்திரப்படகில் பயணம்

திருகோணமலையில்  இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று திங்கட்கிழமை (5) அதிகாலையில் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மின்சார சபையை இல்லாது ஒழிக்கவும்: அரசாங்கத்துக்கு பரிந்துரை

மறுசீரமைப்பின் கீழ், இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து, புதிய எட்டு அரச நிறுவனங்களை நிறுவுமாறு மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

புத்தக வெளியீடும் மதிப்பீட்டுரையும்

அ. வரதராஜப்பெருமாள் இன் புத்தக வெளியீடும் மதிப்பீட்டுரையும். Siva Murugupillai Facebook இல் நேரடி ஒளிப்பரப்பாகவும் நடைபெறும்.

ஞாயிறு மார்கழி 04, 2022

நேரம்:

மாலை 3.30 – 6: 30 வரை – கனடா

மாலை 8:30 – 11:30 வரை -பிரித்தானியா

மாலை 9:30 – 00:30 வரை – ஐரோப்பா

காலை 2:00 – 5:00 வரை – இலங்கை, இந்தியா

காலை 7:30 – 10:30 வரை – அவுஸ்திரேலியா சிட்னி திங்கள் கிழமை

சுற்றுலாப் பயணிகளால் நவம்பரில் டொலர் மழை

நவம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலங்கை ஈட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றை அறிந்திருப்பது இன உறவின் அடித்தளம்

(மொஹமட் பாதுஷா)

கிழக்கில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசம் ஒன்றில் முஸ்லிம் போடியார் ஒருவருக்குச் சொந்தமான வயல் நிலத்தை தமிழர் ஒருவர் முறைகேடாக ஆக்கிரமிக்க முற்பட்டிருக்கின்றார். அப்போது அருகிலுள்ள வயலின் உரிமையாளரான தமிழர் அவரை விரட்டியிருக்கின்றார்.

ஆய்வு மற்றும் ஆவணவகம்…

மறைந்த எழுத்தாளர் சாகித்ய ரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆய்வு மற்றும் ஆவணவச் சேகரிப்பு பணிகளை கௌரவிக்கும் வகையிலும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் பாக்யா பதிப்பகம் முன்னெடுக்கும் நிலைபேறான நினைவேந்தல் திட்டமாக ‘தெளிவத்தை ஜோசப் ஆய்வு மற்றும் ஆவணவகம்’ ( Theliwatte Joseph Reserch and Documentation Centre ) வத்தளையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை மிரட்டுவதற்கு இடமளிக்கமுடியாது

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் தொழிலாளர்களை, சிஐடியினரை களமிறக்கி அச்சுறுத்தும் செயலை தோட்ட நிர்வாகங்கள் உடன் நிறுத்த வேண்டும் என தெரிவித்த இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  ஜீவன் தொண்டமான்,  இல்லையேல் தக்க பாடம் புகட்டப்படும் எனவும் எச்சரித்தார்.

பொது மக்களுக்கு அதிர்ச்சியான செய்தி

அடுத்த ஆண்டு ஜனவரியில் மின் கட்டணம் 70 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது மக்களுக்கு கட்டுப்படியாகாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின்  தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஏழுகன்னியர் மலை விமான விபத்து; 46 வருடங்கள் பூர்த்தி

டி.சி. 08 என்ற விமானம்  மஸ்கெலியா- ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன்  46 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1974ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதியன்று, இந்தோனேசியாவில், மார்டினா டி. சி. விமானம் 08 தனது பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று கொண்டிருந்த போது ,- லக்ஷபான பிரதேசத்தை அண்டிய ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானது.

பார்வை பறிபோகும் அபாயம்: மக்களே அவதானம்

சமூகத்தில் கண்டறியப்படாத கிளௌகோமா நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என கண் வைத்திய நிபுணர் டாக்டர் தில்ருவானி ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இவர்களுக்கு முதலில் அறிகுறிகள் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.