தொழிலாளர்களை மிரட்டுவதற்கு இடமளிக்கமுடியாது

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் தொழிலாளர்களை, சிஐடியினரை களமிறக்கி அச்சுறுத்தும் செயலை தோட்ட நிர்வாகங்கள் உடன் நிறுத்த வேண்டும் என தெரிவித்த இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  ஜீவன் தொண்டமான்,  இல்லையேல் தக்க பாடம் புகட்டப்படும் எனவும் எச்சரித்தார்.