வரலாற்றை அறிந்திருப்பது இன உறவின் அடித்தளம்

(மொஹமட் பாதுஷா)

கிழக்கில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசம் ஒன்றில் முஸ்லிம் போடியார் ஒருவருக்குச் சொந்தமான வயல் நிலத்தை தமிழர் ஒருவர் முறைகேடாக ஆக்கிரமிக்க முற்பட்டிருக்கின்றார். அப்போது அருகிலுள்ள வயலின் உரிமையாளரான தமிழர் அவரை விரட்டியிருக்கின்றார்.