நந்திக் கடல் அருகே

இழந்து இழந்து

பின்வாங்கிப் பின்வாங்கி
இழுத்துவந்தீர்கள் இங்கு 
நந்திக் கடலருகே
நான்கு லட்சம் பேர் நாங்கள்

(“நந்திக் கடல் அருகே” தொடர்ந்து வாசிக்க…)

அன்னையர் தின வாழ்த்துகள்!

தியாகியாகாமல்,
தெய்வமாகாமல்,
தன் கடமையை மட்டும் சரியாக ஆற்றினால்
போதும் அன்னையர்களே!

(“அன்னையர் தின வாழ்த்துகள்!” தொடர்ந்து வாசிக்க…)

ஓ இலங்கை அரசாங்கமே!

இசுலாமியர் உங்களிடம்
எதைக் கேட்டுவிட்டார்கள் என்று
அடிக்கிறீர்கள்?

அரசாங்கத்தில் வேலைவாய்ப்புக்
கேட்டார்களா?
உங்களுக்கே வேலையில்லை
என்பதால் தானே
இனவாதிகளின் முதுகு சொறிகிறீர்கள்.

(“ஓ இலங்கை அரசாங்கமே!” தொடர்ந்து வாசிக்க…)

நல்லாட்சி

நீலவானனும் பச்சைமாலனும்
பொற்காசுக்கு அடிமையாகி
பெற்றதாயைத்துகிலுரிந்து
பிறத்தியார்க்கு அம்மணங்காட்டி
துச்சாதனம் பண்ணுகிறார்;
வாளுடைய சிங்கமாய்
கொம்புடைய யானையாய்
செங்கொடிச் சிறுத்தைகளுடன்
பேருக்குக் கூட்டுச்சேர்ந்து
நல்லாட்சி நாமம்வைத்து
நடக்கிறது தர்பார்கூத்து.

(“நல்லாட்சி” தொடர்ந்து வாசிக்க…)

பின்னென்ன உயர்குல வேளாளன்?

எலும்பை ஊடறுத்து

உயிரைத் தீண்டும்
ஊசிக்குளிர்

வாழ்வின் மிடறறுத்து
உயிரைத் துரத்தி
உறிஞ்சிக்குடிக்கும் வெஞ்சினம்

கொடுமைகளில் சிதைந்தது சுற்றம்
ஆன்மாவும் விறைக்கும்
கூதல் வெளியில்
தடுமாறிச் சுவாசிக்கும்
தட்டுக் கெட்டு மிஞ்சிய சுற்றம்

(“பின்னென்ன உயர்குல வேளாளன்?” தொடர்ந்து வாசிக்க…)

அல்லாஹு அக்பர்!

-எஸ். ஹமீத்
ண்ணமெல்லாம்
சுற்றிவரச் சிங்கள ஊர்களினால்
சூழப்பட்டிருக்கும் அந்த
ஒற்றை ஒற்றையான
முஸ்லிம் கிராமங்களைப் பற்றியே
சுழல்கிறது…

(“அல்லாஹு அக்பர்!” தொடர்ந்து வாசிக்க…)

கூவல்!

(எஸ். ஹமீத்)
குயில் கூவுகிறது…
அகம் மகிழ்கிறது!
குழந்தை கூவுகிறது…
அரவணைப்பு கிடைக்கிறது!
வியாபாரி கூவுகிறான்…
விற்பனை நடக்கிறது!
அரசியல்வாதி கூவுகிறான்…
வாக்குகள் சேர்கிறது!
சேவல் கூவுகிறது…
காலை புலர்கிறது!
சிரியா கூவுகிறது…
மரணங்களே மறுமொழியாகிறது!

எல்லோரும் சமமென்று இயற்றிடுக சட்டமொன்று!

(எஸ். ஹமீத்)
ஆங்கிலேயர் கருணை கூர்ந்து
அன்றொருநாள் சுதந்திரம் ஈந்து
ஆண்டுகள் அறுபத்தொன்பதும்
ஆகிற்று; ஆனாலும்…
ஓய்ந்ததுவோ வன் கொடுமை?
ஓங்கியதோ நம் நிலைமை?

(“எல்லோரும் சமமென்று இயற்றிடுக சட்டமொன்று!” தொடர்ந்து வாசிக்க…)

அம்மணமாய்தான் நிற்க்கின்றோம்

நாங்கள் அம்மணமாய்தான் நிற்கின்றோம்

ஆடையணிந்தால் அழகாகிடுமாம்

தெருவெங்கும் சாலையெங்கும்

மூக்கை பிடித்து மூச்சடக்கி போகும் மனிதர்களே

அந்த நாற்றத்தில் நாள்தோறும்

விழுந்து சாகின்றோம்

(தொடர்ந்து வாசிக்க…)

ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !

“விதையுங்கள், கொள்ளையன் அறுவடை செய்ய அனுமதிக்காதீர்! செல்வம் கண்டெடுங்கள், எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்! ஆடைகளை நெய்யுங்கள், சோம்பேறி அணியவிடாதீர்! ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!” – கவிஞர் ஷெல்லி

(“ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !” தொடர்ந்து வாசிக்க…)