சுன்னாகம் கழிவு ஒயில் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதிலும் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. கழிவொயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென அப்பிரதேசங்களைச் சேர்ந்த இருசுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில், குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
(“நீர் மாசு விவகாரம்: நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்த ஐங்கரநேசன்!” தொடர்ந்து வாசிக்க…)