நான் பார்த்து வியந்த ஒரு மனிதன்

கிளிநொச்சிக்கு ஓர் அரசியல் வாதி வருவதாக இருந்தால் அவருடைய ஊடக செயலாளர் எம்மை தொடர்பு கொள்வார் இந்த திகதியில் இத்தனை மணிக்கு நாம் வருவோம் என்று இல்லை எனில் சக ஊடகவியாளர் ஒருவருக்காவது தகவல் வழங்கப்படும். இன்று எனக்கு ஓர் அழைப்பு வந்தது ஓர் அமைச்சர் கிணறுகளை சுத்தம் செய்கிறார் என்று நான் குறித்த இடத்துக்கு செல்லும் போது அங்கு அவர் இருக்கவில்லை அருகில் நின்றவர்களை விசாரித்தேன் ஓர் அமைச்சர் வந்து இந்த கிணற்றை துப்பரவு செய்தாரம் எங்கே போயிருக்கிறார் என்று அவர்கள் சொன்னார்கள் அமைச்சர் வந்ததாக தெரியவில்லை சிலர் வந்து நீரை இறைத்து துப்பரவு செய்தார்கள் என்று பின்னர் அத்தகவல் அறிந்து அவர் இருந்த இடத்துக்கு சென்றேன். (“நான் பார்த்து வியந்த ஒரு மனிதன்” தொடர்ந்து வாசிக்க…)

‘அமைச்ச​ரவைத் தொடர்பில் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்’

புதிய அமைச்சரவைத் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஏமாற்றமடைந்துள்ளனரென, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (“‘அமைச்ச​ரவைத் தொடர்பில் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்’” தொடர்ந்து வாசிக்க…)

உ/த பெறுபேற்றில், முதல் மூன்றிடம் … தமிழ் மாணவர்கள் யாரும் இல்லை

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதல் மூன்றிடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்கள்.. (“உ/த பெறுபேற்றில், முதல் மூன்றிடம் … தமிழ் மாணவர்கள் யாரும் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

ஷொங்சிங் விமான நிறுவனம் இலங்கைக்கான முதலாவது சேவையை ஆர​ம்பித்துள்ளது

சீனாவின் ஷொங்சிங் விமான சேவையைானது ஷொங்சிங் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேர​டி விமானசேவையை நேற்று முன்தினம் (28) ஆரம்பித்துள்ளது. சீனாவின் ஷொங்சிங் விமான நிலையத்திலிருந்து முதன் முதலாக பயணத்தை ஆரம்பித்த ஓ.கியு. 2393 என்ற விமானம் நேற்று முன்தினம் 9.10 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த இந்த விமானத்தில் 152 பயணிகளும் 11 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர். குறித்த விமானம் வாரத்தில் திங்கள், புதன், வௌ்ளி ஆகிய நாள்களில் இரவு 9.10 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடையும் என்பதுடன், குறித்த தினமே இரவு 10.10 மணியளவில் இவ் விமானம் சீனாவை நோக்கி புறப்படவுள்ளது.

‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’

அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார். (“‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் றொபேட் (சுபத்திரன்)

ஞாபகார்த்த நிலையத்தின் அங்குரார்ப்பண வைபவம் 24.12.2018 அன்று கண்டி வீதி, நுணாவில், சாவகச்சேரி என்னுமிடத்தில் நடைபெற்றது. தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் சுகு ,மத்திய குழு உறுப்பினர் தோழர் சாந்தன் மற்றும் தோழர்கள் பங்குபற்றியிருந்தனர்.

தோழர் றொபேட்டின் 61 ஆவது பிறந்தநாள் நினைவாக

அமரர் தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) அவர்களின் 61 ஆவது பிறந்த நாள் இன்றாகும் (24.12.2018) தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டதில் தனது 24 ஆவது வயதில் இணைந்து கொண்ட சுபத்திரன் 46 வயதில் இறக்கும் வரை அதே குறிக்கோளுடன் உழைத்தவர். 1998 இலிருந்து 2003 வரை யாழ் மாநகர சபை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

Mrs Sarveswary Paramasamy passed away

தோழர் செண்பகத்தின் அம்மா

Vasuki’s (Vasuki Aathavan) Mom Mrs Sarveswary Paramasamy passed away peacefully at home yesterday evening (December 21, 2018)

VISITATION :
Tuesday, December 25, 2018
From 5:00 pm to 9:00 pm

Wednesday ,December 26,2018 From 8:00 am to 9:30 am

At Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham , ON L3R 5G1

SERVICE :

Wednesday,December 26,2018
From 9:30 am to 11:30 am

At Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON
L3R 5G1

CREMATION & WITNESSING

Wednesday, December 26, 2018
@ 12:00 Noon to 12:30 pm
At :Highland Hills Crematorium
12492 Woodbine Avenue,
Gormley, ON L0H 1G0

பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு

(ஜனகன் முத்துக்குமார்)

ஜேர்மனியின் சான்செலர் இன்னமுமே ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மூத்த அதிகாரியின் பங்கை வகிக்க முயலுகின்றமை, தற்போது ​​அங்கெலா மேர்க்கல் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுதல்) மீது பிரித்தானிய அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் மூலம் தெளிவாகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் மார்ச் 29 அன்று வெளியேறும் குறித்த நான்கு மாத காலத்துக்குள் மற்றும் மேர்க்கல் தனது சான்செலர் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு நாள் குறித்த பின்னருமான இக்காலப்பகுதியில் ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரேசா மேயுடனான பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வை எட்டும் நோக்கிலேயே சான்செலர் மேர்க்கல் முயன்று வருகின்றமை – தன்னை – தனது சான்செலர் பதவியின் காலப்பகுதிக்கு பின்னரான காலத்திலும் ஐரோப்பிய அரசியலில் நிலைநிறுத்துவதற்கான ஒரு செயற்பாடாகவே மேர்க்கல் செயற்படுவதாக பார்க்கப்படுகின்றது. (“பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு” தொடர்ந்து வாசிக்க…)

காங்கிரஸ் கூட்டணியில் இணைய கமல் முடிவு? – பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல்

காங்கிரஸ் கூட்டணியில் இணைய மக்கள் நீதி மய்யம் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக வுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான அணியை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. (“காங்கிரஸ் கூட்டணியில் இணைய கமல் முடிவு? – பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல்” தொடர்ந்து வாசிக்க…)