‘அமைச்ச​ரவைத் தொடர்பில் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்’

புதிய அமைச்சரவைத் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஏமாற்றமடைந்துள்ளனரென, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் எவ்வித ஏமாற்றங்களும் ஏற்படவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயற்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.