மரண அறிவித்தல்

யாழ் சம்பத்தரிசியார் கல்லூரியின் பழைய மாணவரும் சிறந்த உதைபந்தாடட வீரரும், 1977 இல் சுகாதாதாசா விளையாட்டு அரங்கில் அகில இலங்கை ரீதியிலான இறுதி ஆடடத்தில் இரண்டு யாழ்ப்பாணத்து உதைபந்தாட்ட பிரபல்ய கல்லூரிகளான ஹென்றி அரசர் (St Henrys) கல்லூரியும் சம்பத்தரிசியார் கல்லூரியும் மோதிய போது சம்பத்திரிசியார் (St Patrick’s) கல்லூரிக்கு தலைமை தாங்கியவருமான ஐசனோவர் (Eisenhower)நேற்று இந்தியாவில் காலமானார். 80 களின் ஆரம்பத்தில் க்ரீன்பீல்டு (Greenfield F.C) விளையாட்டுக்கழகம் என்னைப்போன்ற இளையோரின் இணைப்பில் ஐசனோவர்(St Patrick’s) அரியராஜா (St Johns)சார்ள்ஸ் Jaffna Central) அமலதாஸ் போன்ற எமக்கு iமுந்திய பிரபல கல்லூரிகளின் சிறந்த விளையாட்டு வீரர்களின் வழிகாடடலில் நான் விளையாடியதை பெருமையாக எண்ணுகிறேன். இதுவே நான் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட குழுவிலும் விளையாடுவதற்கு உதவியாக இருந்தது. ஐசனோவர் ஒரு சிறந்த Full back . அவர் எனது உறவினர் கூட. அவரோடு விளையாடியதை நான் பெருமையாக கருதுகிறேன். பின்னாளில் St Rochs விளையாட்டு கழகத்தில் எனக்கு பின்னான இளையோரை இணைத்து சிறந்த அணியாக 80 களின் கடைசி பகுதியில் மிலிட்ட செய்தார். மறக்க முடியாத நல்ல மனிதர். அன்பென்று வந்தால் அரவணைத்து மகிழ்வார். பிரச்சனை என்று வந்தால் தைரியமாய் எதிர்த்து நிற்பார். மிகவும் இரக்க குணம் உடையவர். அவரது ஆத்மா சாந்தியடைவதாக.

ஹெரோய்னுடன் இந்திய மீனவர்கள் மூவர் கைது

மன்னார் அரிப்பு பிரதேசத்துக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இரண்டு கிலோகிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் இந்திய மீனவர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த போதைபொருளுடன் வந்த இந்திய மீனவர்கள் பயணித்த சிறிய ரக மீனவப் படகில், நேற்று வியாழக்கிழமை அதிகாலை, கடற்படையினர் சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையின்போது, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். படகில் இருந்த இந்திய மீனவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்க்ள மற்றும் கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைபொருளை கொழும்பு, போதை ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற ரீதியில், ஒவ்வொரு உயிரையும் தக்க வைப்பதற்கான தமிழ் மக்களின் போராட்டம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட நிலையில்தான், பொலிஸாரின் அதிகார அத்துமீறலின் நிமித்தம் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன.

(“மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

கம்போடியா பொல் பொட்டை விஞ்சும் புலிகளின் பிரபாகரன்

உலகிலேயே மோசமான சர்வாதிகாரியாக இருந்தவன் கம்போடியாவின் “பொல்பொட்” ஆவான். பொல்பொட் செய்த இன அழிப்பு, சித்திரவதைகள் மோசமானவை. புலிகள் செய்த சித்திரவதைகள் பெரும்பாலும் பொல்பொட்டின் பாணியிலேயே இருந்தன. ஆனாலும் புலிகளின் சித்திரவதைகள் பொல்பொட்டை மிஞ்சுவதாகவே இருந்தது. தோழர் மணியம் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்படும் புலிகளின் சித்திரவதைகள் போல பொல்பொட் செய்யவில்லை.

(“கம்போடியா பொல் பொட்டை விஞ்சும் புலிகளின் பிரபாகரன்” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்று துளிகள் ..

“1919 ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் படுகொலை
1940 மார்ச் 13 லண்டனில் வைத்து மரண தண்டனை”

ஜாலியன் வாலாபாக் சுதந்திர போராட்ட போராட்டம் நடத்திய மக்கள் மீது 15 நிமிடத்திற்கு விடாமல் துப்பாக்கி சூடு 1000 பேர் உடனடி மரணம். சுடும் போது மக்கள் தப்பிக்காமல் இருக்க வழிகளை அடைக்க உத்தரவு போட்டார் ஜெனரல் டயர் , அதையும் மீறி மதில் மேல் ஏறி தப்பி ஓடியவர்களை நோக்கி வெளியில் இருந்த ராணுவம் துப்பாக்கி சுடு நடத்தியது ரத்த வெள்ளத்தில் வீதிகளெங்கும் 2000 பேர்.

(“வரலாற்று துளிகள் ..” தொடர்ந்து வாசிக்க…)

நம் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் இன்று 01.10.2016

அற்புதமான நடிகன் என்பதோடு நான் மானசீகமாக அவரை என் நடிப்புக் குருவாகவும் ஏற்றுக் கொண்டவன்.அவர் நினைவை ஒரு கட்டுரையின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஸ்ரனிஸ்லாவ்ஸ்கியும்

இருவருமே நடிப்பு என்று பேசும் போது சாதனை படைத்தவர்கள்.ஒருவகையில் இருவருமே கண்டு பிடிப்பாளர்கள்தான்.லாஸ்கி நடிகனின் மனம் அதன் வழி வரும் முறை நடிப்பு அதற்கான பயிற்சிகள் என அவர் இன்று வரை நடிகர்களுக்கான ஒரு கையேடு.

(“நம் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் இன்று 01.10.2016” தொடர்ந்து வாசிக்க…)