பற்குணம் ஏ.ஜி.எ (பகுதி47 )

அரச அதிபர் திஸ்ஸ தேவேந்திரா சமூக,பொருளாதார,அரசியல், பலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவர் 1977 இனக் கலவரம் தொடர்பான சன்சோனி கமிஷன் விசாரணைக் குழுவின் செயலாளராகவும் பணி புரிந்தவர்.
இவர் ஒரு நாள் எதேச்சையாக ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் திருகோணமலை வந்தார்.அந்த வகுப்பில் இரண்டு பொலிஸ்காரர்கள் பயணிகளுடன் தகராறு பண்ணிக் கொண்டிருந்தனர்.அதைக் கண்ட கோபமடைந்த திஸ்ஸ தேவேந்திரா கண்டித்தார்.அவரை யாரென்று அறியாத அந்த பொலிஸ்காரர்கள் இவரை அடித்துவிட்டனர்.இந்த சம்பவம் கபரணைக்கு முன்பாக நடந்தது.

இதையடுத்து திஸ்ஸ தேவேந்திரா கபரணையில் இறங்கி பொலிஸ் நிலையம் சென்றார். இவருக்கு முன்பாக அங்கு அந்த பொலிஸ்காரர்கள் அங்கே நின்றனர்.அவரகள் அந்த நிலையத்தை சேர்ந்த பொலிஸ் என்பது திஸ்ஸ தேவேந்திரா அவர்களுக்கு தெரியாது.அவரகளுக்கும் இவர் யார் என்று தெரியாது.எனவே மீண்டும் அவரை வாசலில் மிரட்டினார்கள்.

அவரோ கவனிக்காமல் உள்ளே போய் பொலிஸ் இன்பக்டரை பார்க்க வேண்டும் என்றார்.அப்போதும் இவர்கள் தகராறு பண்ணினார்கள்.சிறிது நேரத்தில் பொலிஸ் இன்பெக்டர் வர இவர் விசயத்தை சொன்னார்.இதனிடையே அந்த பொலிஸ் காரர்கள் இன்பெக்டரிடம் கதைக்க அவரோ சமாளித்து அனுப்ப முயன்றார்.திஸ்ஸ தேவந்திரா விடவில்லை. முறைப்பாட்டைக் கொடுத்தார்.இறுதியில் முகவரியைக் கேட்க அரசாங்க அதிபர்,திருகோணமலை என்றார்.அடித்த பொலிஸ்காரர்கள் அவர் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக்கேட்டர்கள்.இன்பெக்டர் எழுந்து நின்று சல்யூட் அளித்தார்.

அவரோ அடித்த இருவரையும் உடனடியாக வேலையை விடு நீக்குமாறு பணித்தார்.எந்தக் காரணம் கொண்டும் மன்னிக்க முடியாது.இது சாதாரண மனிதனுக்கு நடந்தால் அவன் என்ன செய்வான் என்று கூறி அவர்களை வேலையை விட்டு நீக்கப் பண்ணினார்.அந்த பொலிஸ் இனபெக்டரையும் எச்சரித்தார்.

இதுதான் பொலிஸ் புத்தி.இப்படி தமிழனுக்கு அல்லது இஸ்லாமியனுக்கோ நடந்தால் இனவாதமாக திரிபு படுத்திவிடுகிறோம்.ஒரு அரசாங்க அஅதிபருடன் எப்படி நடந்துள்ளர்கள்.எல்லா சம்பவங்களுக்கும் இன,மத,மொழி வேறுபாடுகள் காரணம் அல்ல.அதற்காகவே இந்த உண்மைச் சம்பவத்தை பதிவிடுகிறேன்.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 1)

‘இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு’ என்ற கூக்குரல் தென்னிலங்கை சிங்கள – பவுத்த பேரினவாதிகளால் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. ஏற்கனவே சிங்கள பேரினவாதத்தை கக்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, சுதந்திரத்துக்கான தேசிய இயக்கம் போன்ற கடும்போக்கு அமைப்புக்கள் மட்டும் அல்லாது அண்மையில் முளைத்திருக்கும் பொது பல சேனா, சிகல ராவய, இராவண பலய போன்ற அமைப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இந்தப் பேரினவாத சக்திகளின் போர்க்கோலம் அய்ம்பதுகளில் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த வரலாற்றுக் காட்சிகளை நினைவு படுத்துகிறது.

(“இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

EU இருந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரிவும் எம்மவர்கள் வெட்டி பேச்சும்..!!

கடந்த ஐந்து வருடங்களுக்கு ஐரோப்பிய யூனியனில், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து கொண்டது(கொள்ள பட்டது) யாவரும் அறிந்ததே. அவ்விணைவின் மூலம் திறக்க பட்ட எல்லைகளினால் இவ் ஐந்து வருடங்களுக்குள் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் குடியேறியவர்கள் தொகை (+ அகதிகள் ) அண்ணளவாக 9 மில்லியன் மக்கள் வரும். இன்றைய நாட்களில் அவற்றில் அண்ணளவாக 5.5 மில்லியனுக்கு கூடுதலான மக்கள் ஐக்கிய இராச்சிய பிரசைகளாக மாறிவிட்டனர். மிகுதியாக இருப்பவர்கள் 3.5 மில்லியனுக்கு குறைவானவர்களே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் பிரசைகளாக உள்ளனர்.

(“EU இருந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரிவும் எம்மவர்கள் வெட்டி பேச்சும்..!!” தொடர்ந்து வாசிக்க…)

36 இலங்கை தமிழ் அகதிகள் நாளை இலங்கைக்கு வருகை

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய ஒருங்கிணைப்புடன் நாளை செவ்வாய்க்கிழமை 36 இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

(“36 இலங்கை தமிழ் அகதிகள் நாளை இலங்கைக்கு வருகை” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு

வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை (27) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள நிலையில், கிளிநொச்சி பகுதியிலுள்ள அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தனியார் பஸ்ஸூக்கு 60 சதவீதம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் 40 சதவீதம் என்ற விகிதாசார அடிப்படையில், கடந்த 3 வருடகால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது. எனினும் இந்த அட்டவணைக்கு, இலங்கை போக்குவரத்துச் சபை ஒத்துழைப்பு வழங்காத நிலையில், அத்துமீறிய சேவையை மேற்கொண்டு வருவதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தவிடயம் தொடர்பில் மத்திய மற்றும் மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை என்றும் குறித்த சங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்திற்கொண்டு இன்று திங்கட்கிழமை முதல், தீர்வு கிடைக்கும் வரை வடமாகாணம் முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வெளிவந்து விட்டது வானவில் இதழ் 66

போருக்கு பின்னரான வடக்கின் குற்றச்செயல்கள

அண்மைக்காலமாக வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுக்கள், கொலை, கொள்ளை, சிறுவர்கள் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனை போன்ற சமூக விரோதச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அறியக் கிடைக்கின்றது. இந்த குற்றச்செயல்கள் அனைத்துமே  யாழ் குடாநாட்டில் மாத்திரமன்றி, நாடு தழுவிய ரீதியில் நடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எனினும் யாழ் குடாநாடு தவிர்ந்த, நாட்டின் ஏனைய நிலப்பரப்பு மற்றும் அங்கு வாழும் மக்கள் தொகையினை, யாழ் குடாநாடு போன்ற மிகச் சின்னஞ்சிறிய நிலப்பரப்பில் வாழும் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், யாழ் குடாநாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் அதிகமென பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

(“வெளிவந்து விட்டது வானவில் இதழ் 66” தொடர்ந்து வாசிக்க…)

NRTSL organised a Landmark meeting in London

NRTSL(NEWSLETTER)                                                                                                   25 June 2016

 

Sri Lanka Deputy Foreign Minister Hon. Dr Harsh de Silva and Mrs Rosie Senanayake, Deputy Chief of Staff, Prime Minister’s Office met a wide gathering of Tamils at a meeting organised by the Non Resident Tamils of Sri Lanka (NRTSL)at Sangam Hall, Burnt Oak, Edgware, Middx., on the evening of 18 June 2016.

(“NRTSL organised a Landmark meeting in London” தொடர்ந்து வாசிக்க…)

பெண்களே“கண்கள்!“அழகுநோக்கியஅபாயம்?

(விஜிதாலோகநாதன், ஜெர்மனி)

இன்றையஉலகம் விளம்பரயுக்திகளுக்குள் கட்டுண்டுகிடக்கிறது. உணவுமுதல் வைத்தியம்,அழகுமுதல் ஆடைகள்,அநாவசியதேவைகள்-சேவைகள் எனஅனைத்திலுமேவிளம்பர இருட்டையேவெள்ளொளியாகக் கருதவைத்துவிட்டார்கள். சுவாசக்காற்றும் பைகளில் அடைத்துவிற்பனைக்குவந்தாற் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இலகுவாக இலவசமாகக் கிடைக்வுள்ளமனிதவளம் அனைத்தையும் வர்த்தக்குழுமங்கள் தம் லாபத்தேவைக்காகக் காவுகொண்டுவிட்டன. அதிலும் ஆண்களைவிடவிசேடமாகப் பெண்கள் விளம்பரவலைக்கண்களுக்குள் வேடன் வலையின்மான்களாகச் சிக்கிக்கொண்டனர்.அழகுஎன்பதுபெண்களுக்குஉணவை,நீரைவிடவும் முக்கியமாகப் பார்க்குமளவுக்குகற்பிதப்படுத்தியகலை-கலாச்சாரப் பாங்குகளும் இன்றையவிளம்பரவர்த்தகர்களுக்குபெரிதும் துணைநிற்கின்றன.

(“பெண்களே“கண்கள்!“அழகுநோக்கியஅபாயம்?” தொடர்ந்து வாசிக்க…)

நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி

நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.

(“நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி” தொடர்ந்து வாசிக்க…)

பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !

இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.
பேஸ்புக்,  போட்டோக்களாலே அதிக வாசகர்களை இணைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(“பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !” தொடர்ந்து வாசிக்க…)