வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகளுக்குரிய நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால் நாளை மறுதினம் (15) காலை 9 மணிக்கு, யாழ். மாவட்ட செயலகம் முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

(“வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் வாள்வெட்டு: ஸ்தலத்துக்குச் செல்ல பொலிஸார் தாமதம்?

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில், நேற்று (12) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இளம் குடும்பஸ்தர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருநகர், உத்தரிய மாதா ஆலயச் சந்தியிலுள்ள சலவைத் தொழிலகமொன்றுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரொருவர் சென்றுள்ளார். இதன்போது, அந்தக் குடும்பஸ்தரைப் பின்தொடர்ந்துச் சென்ற சிலர், அவரை வாளால் வெட்டியுள்ளதுடன், சலவைத் தொழிலக உரிமையாளரையும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

(“யாழில் வாள்வெட்டு: ஸ்தலத்துக்குச் செல்ல பொலிஸார் தாமதம்?” தொடர்ந்து வாசிக்க…)

வீட்டில் முறைகேடாக நடந்துகொண்ட யுவதியும் 7 மாணவர்களும் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு, தாண்டவன்வெளி பகுதியிலுள்ள வீடொன்றில் முறைகேடாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில், 27 வயது யுவதியொருவரும் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 7 பேரும், இன்று (13) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாண்டவெளி, பாரதீ வீதி, இரண்டாம் குறுக்கு தெருவிலுள்ள குறித்த வீட்டில், மாணவர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக, மட்டக்களப்பு தலைமையப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அவ்வீட்டைத் திடீரென முற்றுகையிட்டபோதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

(“வீட்டில் முறைகேடாக நடந்துகொண்ட யுவதியும் 7 மாணவர்களும் கைது” தொடர்ந்து வாசிக்க…)

இறுதிக் கோட்டையும் சிரிய அரசாங்கத்திடம்’

லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவால் தலைமை தாங்கப்பட்ட, சிரிய இராணுவமும் அதன் தோழமை நாடுகளும், சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதிக் கோட்டையையும், நேற்று முன்தினம் (08) கைப்பற்றியுள்ளன என, அக்கூட்டணியின் தளபதியொருவர் தெரிவித்தார். இதன்மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் ஆட்சி, சிரியா முழுவதிலும் வீழ்த்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

(“இறுதிக் கோட்டையும் சிரிய அரசாங்கத்திடம்’” தொடர்ந்து வாசிக்க…)

பருத்தித்துறை கலவரம்: மேலும் இருவர் கைது

விசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், நேற்று முன்தினம் (12) மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், துன்னாலை – வேம்படி பகுதியைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் ரோந்து நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

(“பருத்தித்துறை கலவரம்: மேலும் இருவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

‘பலாலி காணிகள் கிடைக்கும்’…????

பலாலி பகுதியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றிய பின்னர், பொதுமக்களின் காணிகள், அவர்களிடம் மீளக் கையளிக்கப்படும்” என, மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

(“‘பலாலி காணிகள் கிடைக்கும்’…????” தொடர்ந்து வாசிக்க…)

எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?

(Gopikrishna Kanagalingam)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களின் கீழ், இவ்வரசாங்கம் உருவாக்கப்பட்டபோது காணப்பட்ட அதிகரித்த எதிர்பார்ப்புகளை, இவ்வரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது உண்மையானது, அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அண்மைக்காலத்தில் இவ்வரசாங்கத்துக்கு எழுந்துள்ள சர்ச்சைகளும் நெருக்கடிகளும், அரசாங்கத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்தியிருக்கின்றன என்று கூறினால், அதைத் தவறென்று கூறமுடியாது.

(“எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் கால மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா?

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் திரு ஆனந்தசங்கரி அவர்களின் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இனணந்து பலகட்சிகள் மெகா கூட்டணி ஒன்றை அமைக்கும் செய்தி ஒன்று தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த மெகா கூட்டணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும் இணைய உள்ளதாம்.

(“தேர்தல் கால மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா?” தொடர்ந்து வாசிக்க…)

பெரியாரின் கணிப்பு உண்மையாகிறது

தலித் அர்ச்சகர்களிடமிருந்து பிரசாதம் வாங்க ஆணவ ஜாதியினரில் ஒரு சாரர் மறுப்பதாக கேரளாவிலிருந்து செய்தி வருகிறது.

“பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகரானால், கோவிலில் இருப்பது சாமியே அல்ல, வெறும் கல்தான் என்று பார்ப்பனர் பிரச்சாரம் செய்யத்தொடங்கிவிடுவார்கள்” – என்று பெரியார் சொன்னது எத்துனை உண்மை என இன்று புலப்படத்தொடங்கிவிட்டது.

(“பெரியாரின் கணிப்பு உண்மையாகிறது” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் கனமழை ; 9 ஆயிரம் பேர் பாதிப்பு

யாழில் தொடரும் கனமழையால் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளாதாக, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, இதுவரையில் 2,518 குடும்பங்களை சேர்ந்த 9,141 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், 04 வீடுகள் முழுமையாகவும் , 159 வீடுகள் பகுதிகளவிலும் சேதமடைந்துள்ளன.

(“யாழில் கனமழை ; 9 ஆயிரம் பேர் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)