வினை தீர்க்கான் வேலவன்!
ஈழத் தமிழர்கள் ‘நாங்கள் ஒண்டாக நிக்க வேணும், எங்கட ஒற்றுமையைக் காட்ட வேணும்’ என்றெல்லாம் சமூகநெறி பேசுவது இன ஒற்றுமையை நோக்கியதல்ல. தன்னுடைய இனத்தவரையே, ஏன் சொந்தச் சகோதரர்களையே துரோகி என்று மண்டையில் போடுவதை கைதட்டி ரசித்த கூட்டம், ஒற்றுமை பற்றிப் பேசும் போது குழப்பமாகத் தான் இருக்கும்.
இனி நீங்கள் மாணவர்கள் அல்ல.. ஆசான்: கமல் புகழாரம்
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மெரினாவில் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, இளைஞர்களின் போராட்டத்தில் பங்கெடுத்து நடிகர்கள் ஒளியை வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தார் கமல். இந்நிலையில் இப்போராட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் கூறியிருப்பது, “சபாஷ்! தமிழக மக்களே. இந்தப் போராட்டம் அதிருப்தியின் வெளிப்பாடு. இனி காயங்களுக்கு தேவை கட்டு அல்ல அதை நிரந்தரமாக குணமாக்க வேண்டும்.
(“இனி நீங்கள் மாணவர்கள் அல்ல.. ஆசான்: கமல் புகழாரம்” தொடர்ந்து வாசிக்க…)
அழிப்புகளை பற்றி அறியாதவரால் நடத்தப்படும் எழுகதமிழ்?.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான உன்னிச்சை குளம் உடைப்பெடுத்த ஆண்டு 1958. அப்போது எனக்கு இரண்டு வயதானாலும், பத்து வயதில் அந்த குளக்கட்டில் நடந்து போன போது அந்தக் குளம் உடைப்பெடுத்த வேளை நடந்த அனர்த்தங்களை, என் மாமா கூறியது இன்று என் அறுபது வயதிலும் பசுமரத்து ஆணியாய் நினைவில் உள்ளது. அன்று நடந்தது இயற்கையின் சீற்றம் மட்டும் அல்ல, பொறுப்பான அதிகாரியின் கவலையீனமுமே.
(“அழிப்புகளை பற்றி அறியாதவரால் நடத்தப்படும் எழுகதமிழ்?.” தொடர்ந்து வாசிக்க…)
பறிபோகும் மட்டு மாநகர தமிழ் கிராமங்கள் ?
மட்டக்களப்பு என்றதும் வெளிமாவட்ட மக்களுக்கு கல்லடி பாலமும், அதனை அடுத்துள்ள இராமகிருஷ்ண மிசனும், விபுலாந்தர் சிலையும் தான் நினைவுக்கு வரும். கல்லடி உப்போடை, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, நொச்சிமுனை என நீண்டு செல்லும் தமிழ் பாரம்பரிய கிராமங்கள் தமிழர்களின் கைகளை விட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது
(“பறிபோகும் மட்டு மாநகர தமிழ் கிராமங்கள் ?” தொடர்ந்து வாசிக்க…)
முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்……..(அத்தியாயம் 7)
(அக்கினி ஞானாஸ்ஞானம்)
முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் கழிப்பு அடங்குவதற்கு முன்னரே கிளிநொச்சி இடம்பெயரவேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பீதி மக்களை ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டது. குண்டுச்சத்தங்களும் துப்பாக்கி வேட்டுகளும் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பிவழிந்து கொண்டிருந்தது. மாலை வேளைகளில் மக்கள் வெளியில் வரத்தயங்கினர். ஒருசில வியாபாரிகள் தங்கள் பொருட்கனை லொறிகளிலும் ரைக்டர்களிலும் ஏற்றிக்கொண்டு ஏ9 வீதிக்கு கிழக்காகவும் மேற்காகவும் கொண்டு சென்றனர்.
(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்……..(அத்தியாயம் 7)” தொடர்ந்து வாசிக்க…)
இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமில்லை.
ஒரு சமயம் நான் திரு. காந்தியிடம் சென்றிருந்தேன். அப்போது அவர், ‘நான் சதுர்வருண அமைப்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’’என்று சொன்னார். நான் கேட்டேன்: ‘’உங்களைப் போன்ற மகாத்மாக்கள் ‘சதுர்வருணத்தை’நம்புகிறீர்களா? அது சரி இந்த சதுர்வருணம் என்பது என்ன? அது எவ்வாறு அமைந்திருக்கிறது?
(“இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமில்லை.” தொடர்ந்து வாசிக்க…)
தோட்டத் தொழிற்துறை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்கில் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை
கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி தோட்டக் கம்பனிகள் சார்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட தொழிலாளர்களின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு நிலையம் என்பனவும் கைச்சாத்திட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை தொழில் ஆணையாளர் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்தமை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்த தொழிற்சட்டங்களுக்கு முரணாகவும், தொழிலாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை பறிப்பதாகவும், இயற்கை நீதிக்கு எதிராகவும், 2003ஆம் ஆண்டு அடிப்படை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் இருப்பதனால் அதனை இரத்து செய்யும்படி பதிவு செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எழுக தமிழுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது.
கிழக்கில் நடைபெறவுள்ள எழுக தமிழ் என்பது கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எழுச்சிக்காக அல்லாமல் கிழக்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் வடக்குக்கு அடிமையாக்க முணையும் முயற்சியாக இருப்பதால் இதற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரித்துள்ளதாவது,
(“எழுக தமிழுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது.” தொடர்ந்து வாசிக்க…)
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினாவில் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்காக முதல்வரும், தமிழக எம்பிக்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.