எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகிலிருந்து வறுமை மற்றும் பசி ஒழிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், 2024ஆம் ஆண்டில், 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 295 மில்லியன் மக்கள் கடுமையான அளவிலான பசியை அனுபவித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13.7 மில்லியன் அதிகரிப்பைக் குறிக்கிறது, ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய பசியில் புதிய உச்சத்தை அறிவித்துள்ளது.