நாவலப்பிட்டி நகரை மீண்டும் சூழ்ந்த வெள்ளம்

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில், மாலை வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: நிதி அமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் நிதி மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணைக்காக, 2026 ஏப்ரல் இறுதியில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தைச் (ERD) சேர்ந்த அதிகாரி ஒருவர், குளியாப்பிட்டியவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளையில் பயங்கர மண்சரிவு

கடந்த சில நாட்களாக மலையகப் பிராந்தியத்தில் நிலவி வரும்மழையுடனான காலநிலை காரணமாக, கஹட்டபிட்டிய பகுதியிலுள்ள மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் மண்சரிவு அபாயம் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென ஒரு பகுதியின் மண் திட்டு சரிந்து விழுந்துள்ளது.

இன்னும் 600,000 டொலர் மாயம் ; ஐவருக்கு பயணத்தடை

இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில், மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்துப் பாரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.

ஈரானுக்கு முழு ஆதரவை வெளிப்படுத்தினார் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுக்கு தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் மொஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்த ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது.

·பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்

(Sanjeevan Thurainayagam)

smart

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பத்து கி.மீ. தொலைவில் பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது.

யாலவில் கஞ்சா ​சேனை ; சுற்றிவளைத்த ட்ரோன்

தணமல்வில பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, தணமல்வில பொலிஸாரும் களுத்துறை விமானப்படை முகாமின் UAV (ட்ரோன்) பிரிவினரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (26) யால காப்பகப்பகுதியில் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர்.

CIABOCவில் மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செவ்வாய்க்கிழமை (28) அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

பொகவந்தலாவில் கையெழுத்து வேட்டை

ஹட்டன் நகரில் இயங்கி வரும் நோர்வூட் பிரதேச செயலகத்தை மீண்டும் நோர்வூட் பகுதிக்கே கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி, ‘மலையக அரசியல் அரங்கம்’ கட்சியினால் திங்கட்கிழமை (27) அன்று பொகவந்தலாவ நகரில் கையெழுத்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கைதி மரணம் தொடர்பில் நடவடிக்கை

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஜெயிலர் ஒருவரும் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.