‘ஆசனத்தை கண்டதும் கண் கலங்கி போனேன்”

எனது தந்தை மர்ஹூம் கே.ஏ.பாயிஸ், சிங்கம் போல அந்தக் கதிரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் என் கண் முன் தோன்றி, அவர் புத்தளம் நகருக்கு செய்த சேவைகள் யாவும் நினைவில் நிழலாடிக் கண்ணீரையும் வரவழைத்தது என புத்தளம் மாநகர சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் புதல்வியுமான ஷதா பாயிஸ் மனம் உருகி தெரிவித்தார்.