85 சீன பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்

இந்த நாட்டில் தங்கியிருந்தபோது சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீன நாட்டவர்கள் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, வௌ்ளிக்கிழமை (20)  அதிகாலையில் சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாடு கடத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.