அம்பாறையில் தொடரும் திட்மிட்ட குடியேற்றம்

தமிழர்களின் பூர்வீக நிலமான வடகிழக்கை பேரினவாதம் சிங்கள பெரும்பான்மை மக்கள் வாழும் நிலமாக மாற்ற மெல்ல மெல்ல காய்நகர்த்தியபடி தொடர்ந்து நிலங்களை ஆக்கிரமிக்க முற்படுகிறது என்பதை தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பல சுரண்டல்களில் எடுத்துக் கொண்டதன் மூலம் அவைகளை அறிய முடிகிறது.

இவர்களின் ஊடாக சிங்கள பௌத்த பேரினவாதத்தை கிழக்கில் பரப்பும் நோக்கோடு நிறுவப்பட்டுள்ள குறித்த புத்தர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது இல்லையெனில் இனத்துக்கிடையிலான விரிசல் ஏற்பட இவ்வாறான செயல்களே காரணமாக வரும் காலத்தில் பதியப்படலாம்

குறித்த செயலுக்கெதிராக சம்பந்தப்பட்ட இடத்தில் தமிழ் மக்கள் தடுத்து நிறுத்த ஒன்றுகூடிய போது போலீசார்கள் அவர்களை அச்சுறுதல் செய்யும் விதமாக நடப்பதையும் பொதுத்தளத்தில் பார்க்க முடிகிறது

போலீசாரின் இந்த அடக்குமுறை தொடருமாயின் மக்கள் இதற்கெதிராக போராட முடியாத நிலைமை ஏற்படும் போலீசாரால் விடுக்கப்படும் அறிவுறுத்தலின் ஊடாக மக்களிடத்தில் நிலவும் அச்சத்தை வைத்து பௌத்த மயமாக்கலை செய்ய முனைகிறது அரசு

ஆகையால் குறித்த சிலை நிறுவுதலை தடுக்க தமிழ் அரசியல் கட்சிகள் கட்சிசார் அரசியல் வாதிகள் களத்துக்கு விஜயம் செய்து குறித்த சிலை நிறுவுதலை தடுக்க ஒன்றிணையுங்கள். இல்லையெனில் கால நகர்வில் வடகிழக்கு தாயக பகுதியெங்கும் தமிழர்களின் பூர்வீக நிலமாக இருந்த நிலவளங்கள் இல்லாது போகும் நிலைமை ஏற்படலாம். ஆகையால்

கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலமிது