குறிஞ்சாக்கேணி – கிண்ணியா பஸ் சேவை ஆரம்பம்

குறிஞ்சாக்கேணி பாதுகாப்பற்ற இழுவைப் படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 08 பேர், கடந்த மாதம் உயிரிழந்தனர்.

இதனால் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவுக்கு பாடசாலை செல்வதற்கு மாணவர்கள் படகு சேவையில் பயணிப்பதற்கு அச்சம் கொண்டிருந்த நிலையில் இந்த இலவச பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவுக்கான படகு சேவை கடற்படையினரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.