தீயையடுத்து துறைமுகம் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

உலகின் மிகப் பெரிய விமானந் தாங்கிக் கப்பலான ஜெரால்ட் ஆர். போர்ட், தற்போது செங்கடலில் காணப்படும் நிலையில், கிரேக்கத் தீவான கிறெட்டெயிலுள்ள சூன்டா வளைகுடாவுக்குச் செல்வதாக இரண்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கப்பலின் பிரதான சலவைப் பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக ஏறத்தாழ 200 வீரர்கள் புகை தொடர்பான காயங்களுக்காக சிகிச்சை பெற்றதாக ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பல மணித்தியாலங்களுக்குப் பின்னரே தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதுடன் 100 படுக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.