மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்தும், அதன் காரணமாக உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் தற்போது விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எமது பாராளுமன்றத்திலும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலுக்கு இடமளிக்குமாறு முன்மொழிந்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
