நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, நாடு முழுவதும் கடந்த 8ஆம் திகதி அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.