21 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட பிரத்தியேக உடமைகளை மீள வழங்குமாறு உத்தரவிட்ட நீதவான், விடுதலை செய்துள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை களத்தின் உதவிப்பணிப்பாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது, கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 21 இந்திய மீனவர்களும் 2 இழுவைப்படகுடன் வடக்கு மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டனர்.

இதன்போது கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
 
விடுதலை செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினூடாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு, யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.