21/4: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய குழு

பொலிஸ் தலைமையகத்தில், செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட இந்த குழுவிற்கு தலைமைதாங்குகின்றார்.சிஐடிக்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர்,சிஐடியின் இயக்குநர், பயங்கரவாத விசாரணை பிரிவின் இயக்குநர் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பிரதான குழுவின் கீழ் மேலும் பல உப-குழுக்களை உருவாக்கியுள்ளோம் ஆணைக்குழுவின் அறிக்கையை பிரதான குழு ஏற்கனவே ஆராய ஆரம்பித்துள்ளது.

66,000-68,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கிடைக்கும் புதிய விடயங்கள் குறித்து புதிய விசாரணைகளை முன்னெடுப்போம். அதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.