4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா

போர் ஆரம்பித்த காலத்தில், உக்ரைன் படைகள், ரஷியாவின் குர்ஸ்க் பகுதியை கைப்பற்றியதாக அறிவித்தன.

 குர்ஸ்க் பகுதியின் எல்லையான சுமி என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த இடையக மண்டலத்தை உருவாக்க ரஷ்யா முயன்று வருகிறது. இதன் எதிரொலியாக ரஷ்யா, உக்ரைன் எல்லையில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அடுக்கடுக்கான குண்டுவீச்சு மற்றும் டிரோன் தாக்குதலால் உக்ரைனின் எல்லையோர 4 கிராமங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

இருந்தபோதிலும் அந்த கிராமங்களில் மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்றும், உக்ரைனுக்குள் முன்னேற ரஷ்யா முயற்சிப்பதாகவும் உக்ரைன் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.