ஜெனீவாவில் என்ன கிடைக்கப் போகிறது?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

திங்கட்கிழமை (22) ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பில் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்க, சில நாடுகள் தயாராகி வருகின்றன. இந்த நாடுகளுடன், இணக்கப் பிரேரணை ஒன்றை (consensual resolution) முன்வைக்க முயற்சிப்பதாக, வெளியுறவுச் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகே, ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு அண்மையில் தெரிவித்து இருந்தார்.