யாழ். சந்திப்புகளும் புதிய தமிழ்ப் பேரவையும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

பதவி, பகட்டை அடைவதற்கான வழியாக, அரசியலைத் தெரிவு செய்தவர்கள், அவற்றை அடையும் வரையில், சும்மா இருப்பதில்லை. அதுவும் ஏற்கெனவே பதவி, பகட்டோடு இருந்தவர்களால், அவையின்றி சிறிது காலம் கூட இருக்க முடியாது.எப்படியாவது, குட்டையைக் குழப்பி, மீன் பிடித்துவிட வேண்டும் என்கிற நினைப்பிலேயே அலைந்து கொண்டிருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அரங்கேறும் காட்சிகளைக் காணும் போது, அதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது.